News May 7, 2025
வரகூர்: 70 ஆடுகளை திருடியவர்கள் கைது

மங்களமேடு அருகே உள்ள வடக்கலூர் கத்தாழை மேடு கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 70 ஆடுகள் கடந்த 18ஆம் தேதி காணாமல் போனது. இதுகுறித்து கருப்பையா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன், பிரபு ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
Similar News
News December 20, 2025
பெரம்பலூர்: என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் வேலை

தமிழ்நாட்டில் உள்ள என்.எல்.சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 575
3. வயது: 18
4. சம்பளம்: ரூ.12,524 – ரூ.15,028
5. கல்வித் தகுதி: டிப்ளமோ (Engineering or Technology)
6. கடைசி தேதி: 02.01.2026
7. விண்ணப்பிக்க: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 20, 2025
பெரம்பலூர்: மின் வேலியில் சிக்கி முதியவர் உயிரிழப்பு

தேவையூர் அருகே உள்ள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரம்(63). இவர் பெரியசாமி(60) என்பவர் தோட்டத்திற்கு சென்றுள்ளார். அப்போது பெரியசாமி தனது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிரை பாதுகாக்க அமைத்திருந்த மின் வேலியில் சிக்கி சுந்தரம் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரது உடலை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 20, 2025
பெரம்பலூர்: பெண்கள் தொழில் தொடங்க ரூ.10 லட்சம்

பெரம்பலூர் பெண்களே சொந்தமாக தொழில் தொடங்க அரசு சூப்பர் திட்டத்தை அறிவித்துள்ளது. TWEES என்ற திட்டத்தின் மூலம் பெண்கள் தொழில் தொடங்க 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் வரை தொழில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு கல்வி தகுதி, குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ஏதுவும் இல்லை. 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் இங்கு <


