News May 7, 2025

ஆற்றில் மூழ்கி 6 பேர் மரணம்.. சோகத்தில் முடிந்த விடுமுறை

image

குஜராத் மேஷ்வோ ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விடுமுறையை கழிக்க உறவினர் வீட்டிற்குச் சென்ற அவர்கள், அங்குள்ள ஆற்றில் குளித்துள்ளனர். அப்போது, ஆழம் தெரியாமல் ஒவ்வொருவராக நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 14 – 21 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News January 17, 2026

சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆகணும்: TTV

image

ஜன நாயகன் படத்தை நீதிபதிகள் தடை செய்துள்ளபோது அரசு மீது எப்படி குற்றம் சுமத்த முடியும் என TTV தினகரன் கேட்டுள்ளார். மேலும், தனக்கு பாஜக எந்த அழுத்தமும் தரவில்லை என்றவர், கரூர் சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி மூலம் விசாரிக்க வேண்டும் என்று தவெக தான் கேட்டது. அதன்படி தற்போது நடக்கும் சிபிஐ விசாரணைக்கு விஜய் போய்தான் ஆக வேண்டும். அது எப்படி பாஜகவின் அழுத்தமாகும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News January 17, 2026

மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. HAPPY NEWS

image

மகளிருக்கு பொங்கலுக்குள் மகிழ்ச்சியான செய்தி என அமைச்சர் கூறியதிலிருந்தே, எப்போது உயர்வு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால், இதுவரை அரசு அறிவிப்பை வெளியிடவில்லை. இதனிடையே, மகளிருக்கு ₹2,000 வழங்கப்படும் என அதிமுக தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டது. இதனால் உரிமை தொகையை உயர்த்துவது குறித்த அறிவிப்பை வெளியிட திமுக அரசு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

News January 17, 2026

காளைகளை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகை எங்கே? பாஜக

image

மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை என CM ஸ்டாலின் அறிவித்த நிலையில், பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவதே திமுகவின் வழக்கம் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். ஜல்லிக்கட்டு காளைகளை வளர்ப்போருக்கு மாதம் ₹1000 வழங்கப்படும் என திமுக கொடுத்த வாக்குறுதியை இதுவரை நிறைவேற்றவில்லை எனவும் அவர் சாடியுள்ளார். 5 ஆண்டுகளில் அவர்களுக்கு வழங்க வேண்டிய ₹60,000 எப்போது வருமென தெரியவில்லை எனவும் விமர்சித்துள்ளார்.

error: Content is protected !!