News May 7, 2025

BREAKING: திருப்பூரில் இளம்பெண் கொலை

image

திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே காலி இடத்தில் இளம்பெண் ஒருவர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இத்தகவலின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இறந்த பெண் யார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News July 7, 2025

திருப்பூர்: மகளை கர்ப்பமாக்கிய ஸ்டெப் ஃபாதர்!

image

திரூப்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தாயுடன் வசித்து வந்தார். இந்நிலையில், இவரது தாய் இரண்டாவதாக பகாரைச் சேர்ந்த அபய் குமார்(40) என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இந்நிலையில், அவர் சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதால் அச்சிறுமி 4 மாதம் கர்ப்பமானார். இதையடுத்து, தலைமறைவான அபய் குமாரை போலீசார் தேடி வந்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு நேற்று(ஜூலை 6) போலீசார் அவரைக் கைது செய்தனர்.

News July 6, 2025

காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம்

image

திருப்பூர் மாவட்டத்தில் தங்களது பகுதியில் இன்று 06.07.2025 இரவு பணியில் இருக்கும் காவல் அதிகாரிகளின் அலைபேசி எண்களை, பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளவும். காங்கேயம், உடுமலை, தாராபுரம், பல்லடம், அவினாசி ஆகிய பகுதியில் உள்ள காவல்துறையின் இரவு ரோந்து பணி விபரம், மாவட்ட காவல்துறையினரால் வெளியிடபட்டது. மேலும் அவசர உதவிக்கு 108 ஐ அழைக்கவும்.

News July 6, 2025

திருப்பூரில் காளான் வளர்ப்பு பயிற்சி!

image

திருப்பூரில், கனரா வங்கி கிராமப்புற சுய வேலைய வாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக, காளான் வளர்த்தல் மற்றும் அதன் மதிப்புக் கூட்டு பொருட்கள் தயாரித்தல் பயிற்சி விரைவில் நடைபெறவுள்ளது. இதில் பயிற்சி, சீருடை, உணவு, அனைத்தும் இலவசமாகவும், பயிற்சி முடிவில் அரசு சான்றிதழும் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 9489043926, 9952518441 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!