News May 7, 2025

பாகிஸ்தானை ஆதரித்தால் தேசதுரோகம்: சித்தராமையா

image

பாக்.,-க்கு ஆதரவாக கோஷம் எழுப்புவது தேசதுரோகம் என கர்நாடக CM தெரிவித்துள்ளார். மங்களூருவில் ’பாகிஸ்தான் ஜிந்தாபாத்’ என கோஷம் எழுப்பிய நபர் கொல்லப்பட்டார். இதுகுறித்து பேசிய சித்தராமையா, பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் அது தேசதுரோகம். அதில் யாருக்கும் எந்த மாற்றக் கருத்துமில்லை; ஆனால், பாக்.,-ஐ எதிரியாக சித்தரித்து அரசியல் செய்யும் கட்சியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றார்.

Similar News

News October 15, 2025

BREAKING: இரவில் விஜய் எடுத்த அதிரடி

image

கரூர் துயரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை ஒரே இடத்தில் சந்தித்து ஆறுதல் கூறி, நேரில் நிதியுதவி அளிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை விஜய் சந்திப்பதற்கான இடத்தை தர, பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், இடத்தை தேர்வு செய்தபின், தீபாவளிக்கு பிறகே விஜய் கரூர் செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News October 15, 2025

VIRAL: ராமர் கோயிலின் முதல் தள புகைப்படங்கள்

image

அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகிறது. இந்த கோயிலின் முதல் தளத்தின் புகைப்படங்கள் முதல்முதலில் வெளிவந்துள்ளன. இங்கு 5 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. தெய்வீக அனுபவத்தையும், கட்டிடக்கலை மகத்துவத்தையும் வெளிப்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தளம், ராமரின் அரசவையை அழகாக பிரதிபலிக்கிறது. மேலே Swipe செய்து அதை பாருங்கள்.

News October 15, 2025

இன்னைக்கு ரொம்ப கவனமா இருங்க

image

வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று(அக்.15) கோவை, நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையிலும் மிதமான மழை பெய்யுமாம். எனவே, பள்ளி, கல்லூரி, அலுவலகங்களுக்கு செல்வோர் குடைய எடுக்க மறக்காதீங்க.

error: Content is protected !!