News May 7, 2025

புடவையில் தீப்பிடித்து பெண் உயிரிழப்பு

image

காம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அஞ்சலை. நேற்று முன்தினம் இயற்கை உபாதை கழிப்பதற்காக தனது வீட்டின் அருகே சென்ற போது அங்கு யாரோ குப்பை கொளுத்திய நெருப்பு புகைத்து கொண்டிருப்பதை கவனிக்காமல் அருகில் சென்றுள்ளார். அப்போது திடீரென புடவையில் தீப்பிடித்து உடல் முழுவதும் தீக்காயம் ஏற்பட்டு மேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சிக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Similar News

News August 20, 2025

கள்ளக்குறிச்சி: சி.இ.ஓ புதிய உத்தரவு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து வகை அரசு மற்றும் அரசு உதவி பெறும் நடுநிலை உயர்நிலைப்பள்ளிகளில் வருகின்ற 29ஆம் தேதிக்குள் சர்வதேச கூட்டுறவு ஆண்டை கொண்டாடப்பட இருக்கிறது. அதற்காக 1முதல் 9வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கூட்டுறவு சார்ந்த கதை சொல்லல், கட்டுரை, பேச்சுப் போட்டி நடத்திட தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு சிஇஓ கார்த்திகா இன்று சுற்றறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

கள்ளக்குறிச்சி: 4 மாணவர்கள் பள்ளியை விட்டு நீக்கம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் அரசு மேல்நிலைப்பள்ளி பள்ளியில் ஒழுங்கீனமாக மது அருந்திவிட்டு ஆசிரியர்களிடம் 11ஆம் வகுப்பை சேர்ந்த 4மாணவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இதனால் மாணவர்களுக்கு நேற்று தலைமை ஆசிரியர் பள்ளி மேலாண்மை குழு SMC பெற்றோர் ஆசிரியர் கழகத்தால் (PTA) ஆலோசனை அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மாற்று சான்றிதழ் (TC) வழங்கப்பட்டு பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர்.

News August 20, 2025

கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு ரூ. 2.10 லட்சம் மானியம்

image

விவசாயத்தில் கால்நடைகளின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் ஏழை விவசாயிகளுக்கு இலவச மாட்டு கொட்டகை அமைக்க ரூ.2.10 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை விவசாயிகள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.. <<17460294>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!