News May 7, 2025

94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

image

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.

Similar News

News August 19, 2025

‘திரை தீப்பிடிக்கும்..’ ஒரே படத்தில் ரஜினி, கமல்?!

image

தொடக்கத்தில் ஒன்றாக நடித்த ரஜினியும் கமலும், பிறகு வெவ்வேறு பாதையில் சென்று விட்டனர். இந்நிலையில், இருவரையும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வைக்க லோகேஷ் கனகராஜ் முயற்சி எடுத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ‘கூலி’ படத்தின் ரிலீசுக்கு முன், இருவரையும் சந்தித்து அவர் ஒரு கதை சொன்னதாகவும், இருவருக்கும் கதை பிடித்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. லோகி இயக்கத்தில் ரஜினியும்- கமலும்.. எப்படி இருக்கும்?

News August 19, 2025

பாஜகவின் ஸ்கெட்ச்.. பதிலுக்கு திமுக போட்ட மாஸ்டர் பிளான்

image

NDA-வின் து.ஜனாதிபதி வேட்பாளராக CPR-ஐ களமிறக்கியதற்கு பின்னால் கொங்கு வாக்காளர்களை கவரும் பாஜகவின் பிளான் இருப்பதாக கூறப்பட்டது. அதோடு, CPRஐ திமுக ஆதரிக்க தவறினால் அது அவர்களுக்கு பேக் ஃபயர் ஆகும் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், அதே கொங்கு பெல்ட்டை சேர்ந்தவரான இஸ்ரோ மயில்சாமி அண்ணாதுரையின் பெயரை திமுக பரிந்துரைத்துள்ளதாம். திமுகவின் இந்த மாஸ்டர் பிளான் வொர்க் அவுட் ஆகுமா?

News August 19, 2025

பருத்தி மீதான இறக்குமதி வரி ரத்து

image

பருத்தி மீதான 11% இறக்குமதி வரியை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. டிரம்ப் 50% வரி விதித்ததால், தமிழக உற்பத்தியாளர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்ட, பருத்தி மீதான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் என பிரதமருக்கு CM ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ஆக.19 முதல் செப்.30 வரை பருத்தி மீதான இறக்குமதி வரிக்கு விலக்கு அளித்து, மத்திய அரசு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

error: Content is protected !!