News May 7, 2025
94 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஜாதிவாரி கணக்கெடுப்பு

மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதிவாரி விவரமும் சேகரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாட்டில் முதன்முதலாக முழுமையான ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆங்கிலேய ஆட்சியில் 1931-ல் நடத்தப்பட்டது. அதன் அடிப்படையிலேயே இன்றுவரை இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. 1951-ல் இக்கணக்கெடுப்பு கைவிடப்பட்டது. அதன்பின், 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரமும் சேகரிக்கப்பட்டாலும், அரசு அதை வெளியிடவில்லை.
Similar News
News December 2, 2025
கன்ட்ரோல் ரூமில் ஷூட்டிங் நடத்தும் CM: EPS

டிட்வா புயலால் ராமேஸ்வரமே மூழ்கியபோது, இலங்கைக்கு வேண்டிய உதவிகளை செய்வேன் என CM ஸ்டாலின் வாய்ச் சவடால் அடிப்பதாக EPS விமர்சித்துள்ளார். மழைக்காலத்தில் கன்ட்ரோல் ரூமில் உட்கார்ந்து CM ஷூட்டிங் நடத்துவதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் வெள்ள நீரால் சேதமடைந்த விவசாய நிலங்களை ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 2, 2025
ராசி பலன்கள் (02.12.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News December 2, 2025
கோலி இளமை துடிப்புடன் இருக்கிறார்: ஸ்டெய்ன்

விராட் கோலி மனரீதியாக இளமையாகவும், வலிமையாகவும் உள்ளதாக SA முன்னாள் வீரர் ஸ்டெய்ன் தெரிவித்துள்ளார். கோலியின் வயதுடையவர்கள் (37 முதல் 38) பொதுவாக வீட்டை விட்டு வெளியேறுவதையே வெறுப்பார்கள். பெரும்பாலும் தங்களது குடும்பத்துடன் நேரம் செலவிடவே விரும்புவார்கள். ஆனால், கோலி இந்த வயதில், களத்தில் இளம் வீரர்களுக்கு நிகராக ஓடுகிறார், டைவ் அடிக்கிறார் என்றும் ஸ்டெய்ன் பாராட்டியுள்ளார்.


