News April 5, 2024

திருவள்ளூர் பாஜக வேட்பாளர் மீது வழக்குப்பதிவு

image

திருவள்ளூர் தொகுதி பாஜக வேட்பாளர் பாலகணபதி உட்பட 3 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மெய்யூர் கிராமத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாலகணபதி தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளகாபுரம் வருவாய் ஆய்வாளர் பாலாஜி அளித்த புகாரின்பேரில் பாலகணபதி, பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன், ஒன்றிய தலைவர் சாந்தி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News February 7, 2026

துரோகம் செய்த பாஜகவுடன் அதிமுக கூட்டணி: கனிமொழி

image

யாரோடு இருந்தால் TN பாதுகாப்பாக இருக்கும் என்பது தெளிவாக தெரிவதால் பெண்களும் இளைஞர்களும் திமுகவை ஆதரிக்கிறார்கள் என கனிமொழி பேசியுள்ளார். விருதுநகரில் பேசிய அவர், இவ்வளவு பெரிய இளைஞர் கூட்டத்தை பார்க்கும்போது ’வெற்றி நமது, வெற்றி நமது’ என சொல்ல தோன்றுகிறது என்றார். மேலும், TN-க்கு துரோகம் செய்த பாஜகவுடன் கைகோர்த்துக் கொண்டு நமக்கு எதிராக ஒரு கூட்டணி உருவாகியுள்ளதாக அதிமுகவையும் விமர்சித்துள்ளார்.

News February 7, 2026

மன அழுத்தத்தை குறைக்கும் பொழுதுபோக்குகள்!

image

*ஓவியம் வரைவது, இசைக்கருவிகளை வாசிக்க கற்றுக்கொள்வது மகிழ்ச்சி ஹார்மோனான டோபமைனை வெளியிட்டு மனதை நிம்மதியடைய செய்யும். *செடி வளர்ப்பில் ஈடுபடுவது, நடைபயிற்சி செய்வது மனஅழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. *பழங்கால/பழைய பொருள்களை பழுதுபார்த்து அதன்மீது வண்ணம் தீட்டுவது கவன ஆற்றலை அதிகரிக்கிறது. *பழங்கால முத்திரைகள், நாணயங்கள் சேகரிப்பு மூலம் சுய ஒழுக்கம், பொறுமை வளர்கிறது.

News February 7, 2026

TTV தினகரன், சசிகலா மோதலுக்கு காரணம் என்ன?

image

சசிகலாவை சந்தித்த அமமுக <<19072313>>மாநில நிர்வாகியை கட்சியில் இருந்து நீக்கி<<>> TTV தினகரன் அறிவித்தார். அதன் பின்னரே, TTV தினகரன், சசிகலா இடையிலான பனிப்போர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2017-ல் அமமுகவை தொடங்கிய TTV, சசிகலா குறித்து அதிகம் பேசி வந்தார். ஆனால், 2021-க்கு பிறகு அதனை குறைத்து கொண்டார். 2021 பேரவைத் தேர்தலில் அமமுகவுக்கு பிரசாரம் செய்ய TTV அழைத்தபோது சசிகலா மறுத்ததே அதற்கு காரணம் என கூறப்படுகிறது.

error: Content is protected !!