News May 7, 2025
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அரசு உதவி!

திருவண்ணாமலை மாவட்ட இளைஞர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு! பத்தாம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்த வேலையில்லாத இளைஞர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்குகிறது. மே 31-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலோ அல்லது இணையதளத்திலோ இதற்கு விண்ணப்பிக்கலாம். கல்வித் தகுதிக்கு ஏற்ப மாதம் ரூ.1000 வரை உதவித்தொகை வழங்கப்படும். இந்த தகவலை உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்!
Similar News
News October 29, 2025
முகாமில் பங்கேற்ற எம்.பி தரணிவேந்தன்

இன்று அக்.29 செய்யாறு வட்டம், புளியரம்பாக்கம் தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. ஆட்சியர் க.தர்ப்பகராஜ் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் கலந்து கொண்டு, அரசு சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சி, மருத்துவ முகாமை பார்வையிட்டு, சிறப்புரையாற்றி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உடன் எம்பி தரணிவேந்தன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
News October 29, 2025
இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று (அக்.29) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News October 29, 2025
தி.மலை: 19 வயது வாலிபர் மீது போக்சோ!

தி.மலை: செய்யாறு அருகே 19 வயது இளைஞரும் 16 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். பெற்றோர் திருமண பேச்சால் இருவரும் உணர்ச்சிவசப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், மருத்துவ பரிசோதனையில் அச்சிறுமி 3 மாதம் கருவுற்றது தெரியவந்தது. மகளிர் காவல் நிலையம் POCSO 2012, பிரிவு 3, 4, 6 மற்றும் சிறுவர் திருமணத் தடுப்பு சட்டம் 9, 11 கீழ் வழக்கு பதிவு செய்து பெற்றோர் முன்னிலையில் விசாரணை மேற்கொண்டனர்.


