News May 7, 2025
ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

30 ஏப்ரல் 2025 அன்று, ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில், வலுவான கடவுச்சொல் பயன்படுத்துவது உங்கள் தரவுக்கான ‘டிஜிட்டல் சீட் பெல்ட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது. “உங்கள் தரவு, உங்கள் பொறுப்பு” என்ற குறிப்புடன், இணைய பாதுகாப்பில் கடவுச்சொல் முக்கியத்துவத்தை விளக்கும் இந்த விழிப்புணர்வு மக்களுக்கு உதவிகரமாக அமைந்துள்ளது.
Similar News
News August 14, 2025
ராணிப்பேட்டை: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில், இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ளது. ராணிப்பேட்டை, ஆற்காடு, சோளிங்கர், அரக்கோணம் ஆகிய பகுதிகளில் ரோந்து பணிக்கு ஈடுபடும் போலீசார் தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். மேலும் உதவிக்கு கண்ட்ரோல் ரூமுக்கு 9884098100 அழைக்கலாம்.
News August 13, 2025
ராணிப்பேட்டை: குற்றவாளிக்கு 20 வருடம் சிறை தண்டனை

ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், பாலியல் குற்றம் புரிந்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி தணிகாசலம் (45) என்பவருக்கு 20 வருடங்கள் கடும் காவல் தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் என ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தால் இன்று (ஆகஸ்ட் 13) தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தந்த காவல் அதிகாரிகளை எஸ்.பி. பாராட்டினார்.
News August 13, 2025
ராணிப்பேட்டை ஆட்சியர்: கழிவுநீர் கால்வாய் ஆய்வு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, மேல்விஷாரம் நகராட்சியில் கழிவுநீர் செல்லும் கால்வாய்களை நேரில் ஆய்வு செய்தார். பாலாற்றில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்க, தனியான கால்வாய் அமைக்கும் பணி மற்றும் சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்பின் நிலை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், பணிகள் தரமாகவும் விரைவாகவும் நிறைவேற்றப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.