News May 7, 2025
தேசிய பாதுகாப்பு குழுவுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!

தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராக அலோக் ஜோஷியை மத்திய அரசு நியமித்துள்ளது. ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக முன்னாள் விமானப்படை, தரைப்படை, கடற்படை அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுக்க தயாராகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
Similar News
News October 25, 2025
ஆஸி., மகளிர் அணியினரிடம் அத்துமீறிய நபர் கைது

ODI உலகக் கோப்பையில் விளையாடி வரும் ஆஸி., மகளிர் அணியினர், இந்தூரில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியுள்ளனர். நேற்று 2 வீராங்கனைகள், ஹோட்டலிலிருந்து கஃபேவுக்கு நடந்து சென்றுள்ளனர். அப்போது அவர்களை பைக்கில் ஃபாலோ செய்து வந்த ஒருவர், வீராங்கனைகளிடம் தவறாக நடக்க முயற்சித்துள்ளார். இதுதொடர்பான புகாரின் பேரில், CCTV காட்சிகளின் அடிப்படையில் அக்யூல் கான் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
News October 25, 2025
அஜித் குமார் மரணம்… அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கில் பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. அஜித்தை போலீஸ் தாக்கிய வீடியோவை வெளியிட்ட அவரது நண்பன் சக்தீஸ்வரனை கொலை செய்ய முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு ஏற்கெனவே போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்ட நிலையில், மதுரையில் அவர் சென்ற வாகனம் மீது மற்றொரு வாகனத்தை மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளனர். இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது.
News October 25, 2025
ரத்தத்தில் கையெழுத்து வாங்கும் RB உதயகுமார்

அக்.30-ல் பசும்பொன்னில் தேவர் குருபூஜை நடைபெறவுள்ளது. இதில் EPS கலந்துகொள்கிறார். அவரை வரவேற்கும் விதமாக, ரத்தக் கையெழுத்து இயக்கத்தை RB உதயகுமார் தொடங்கியுள்ளார். முதலில் உதயகுமார், ரத்தத்தில் கைரேகை பதிவு செய்ததை தொடர்ந்து, நிர்வாகிகளும் பதிவு செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நிலையில், மதுரையில் தனது செல்வாக்கு நிலைத்து நிற்க, வீடியோ வாயிலான விமர்சனத்தையும் RB கையிலெடுத்துள்ளார்.


