News May 7, 2025

வேலூர்: கூலி தொழிலாளிக்கு ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ்

image

குடியாத்தம் வெள்ளேரியை சேர்ந்த கவிதா தனது கணவருடன் நேற்று எஸ்பி அலுவலகத்தில் மனு அளித்தார். அதில் ”நானும் எனது கணவரும் கூலி வேலைசெய்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக சென்னையில் நிறுவனம் இயங்கி வருவதாகவும், ரூ.1.70 கோடி ஜிஎஸ்டி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். அந்த நிறுவனத்துக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினர்.

Similar News

News October 19, 2025

வேலூர்: தரமற்ற பெட்ரோலா? இதை பண்ணுங்க!

image

வேலூர் மக்களே, உங்கள் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்குகளில் வாகனங்களுக்கு வழங்கப்படும் பெட்ரோல் தரமானதாக இல்லையென்றால், நீங்கள் உடனடியாகப் புகார் அளிக்கலாம். இதற்காக, அனைத்து பெட்ரோல் நிறுவனங்களும் கட்டணமில்லா தொலைபேசி எண்களை அறிவித்துள்ளன.

1) இந்தியன் ஆயில்: 18002333555

2) பாரத் பெட்ரோல்: 1800224344

3) HP பெட்ரோல்: 9594723895
பயனுள்ள தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்!

News October 19, 2025

வேலூர்: தீபாவளி பண்டிகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு காலை 6-7 மணி வரையிலும், இரவு 7- 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

News October 19, 2025

வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

image

வேலூர் மாவட்டம் ஆரியூரை சேர்ந்தவர் சித்ரா (53). இவர், சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அக்.18 அரியூர் பகுதியில் வியாபாரத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர் சித்ராவின் கழுத்தில் இருந்து ஒரு சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து சித்ரா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.

error: Content is protected !!