News May 7, 2025
மயிலாடுதுறையில் ரூ.25,000 சம்பளத்தில் வேலை

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிதி நிறுவனத்தில் உள்ள Loan Processing Officer பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000-ரூ.25,000 வரை ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் இங்கே<
Similar News
News January 12, 2026
மயிலாடுதுறை: வாகனம் மோதி வாலிபர் பலி

செம்பனார்கோயில், பரசலூரை சேர்ந்தவர் திவாகீஷ் (30), இவருக்கு திருமணம் ஆகி 3 வயதில் குழந்தை உள்ளது. இவர் தனது மோட்டார் சைக்கிளில் பரசலூர் அருகே நேற்று சென்று கொண்டிருந்தபோது, மாதவன் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. பலத்த காயமடைந்த திவாகீஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து செம்பனார்கோயில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News January 12, 2026
மயிலாடுதுறை: வழக்குகளில் பறிமுதல் செய்த வாகனங்கள் ஏலம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில், குற்ற வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 11 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 46 2 சக்கர வாகனங்கள் என மொத்தம் 58 வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் பொருட்டு, பொது ஏலத்தில் விடப்பட உள்ளது. மயிலாடுதுறை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், வருகிற 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு ஏலம் நடைபெறுகிறது. விபரங்களுக்கு 9626169492 தொடர்பு கொள்ளலாம்.
News January 12, 2026
மயிலாடுதுறை: நகராட்சி ஆணையர் முக்கிய அறிவிப்பு

மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும், பொதுமக்கள் “புகையில்லா போகி” கடைபிடிக்க வேண்டும், போகி பண்டிகை அன்று பழைய கழிவுகளை எரிக்காமல் நகராட்சி நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள ஐந்து இடங்களில், பழைய கழிவுகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கலாம். அறிவிக்கப்படாத இடங்களில் குப்பைகளை எரித்தால் அபராதம் விதிக்கப்படும் என நகராட்சி ஆணையர் வீர முத்துக்குமார் செய்தி வெளியிட்டுள்ளார்.


