News May 7, 2025
ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு 2 நாள் பயிற்சி முகாம்

தமிழக அரசு கலை பண்பாட்டு துறை, காஞ்சிபுரம் மண்டல கலை பண்பாட்டு மையத்தின் சார்பில் ஓவிய, சிற்பக்கலைஞர் பங்கேற்கும் 2 நாள் பயிற்சி முகாம் வேலூரில் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது சுயவிவர குறிப்பை உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், சதாவரம், ஓரிக்கை அஞ்சல், சின்ன காஞ்சிபுரம், காஞ்சிபுரம் முகவரிக்கு மே10-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
Similar News
News October 19, 2025
வேலூர்: தீபாவளி பண்டிகை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்டத்தில் தீபாவளிக்கு காலை 6-7 மணி வரையிலும், இரவு 7- 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவும். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், அமைதி காக்கப்படும் இடங்கள், குடிசை பகுதிகள், எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
வேலூர் அருகே நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு

வேலூர் மாவட்டம் ஆரியூரை சேர்ந்தவர் சித்ரா (53). இவர், சேலை வியாபாரம் செய்து வருகிறார். நேற்று அக்.18 அரியூர் பகுதியில் வியாபாரத்துக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் பைக்கில் வந்த மர்மநபர் சித்ராவின் கழுத்தில் இருந்து ஒரு சவரன் செயினை பறித்து கொண்டு தப்பி சென்றார். இது குறித்து சித்ரா அரியூர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
News October 19, 2025
வேலூர்: 30,000 சம்பளத்தில் ரயில்வேயில் வேலை!

ரயில்வே துறையின் கீழ் இயங்கும் RITES நிறுவனத்தில் காலியாக உள்ள 600 Senior Technical Assistant பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வேதியியலில் B.Sc, சிவில், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், கெமிக்கல் உள்ளிட்ட பிரிவுகளில் முழுநேர டிப்ளமோ முடித்த 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் மாதம் ரூ.29,735/வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ-12குள் <