News May 7, 2025
வேலூர்: அடிப்படை பிரச்சனையா கவலை வேண்டாம்!

வேலூர் மாவட்டத்தில் அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார்கள் தெரிவிக்க ‘ஊராட்சி மணி’ அழைப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, சாலை வசதி, குடிநீர், தெருவிளக்கு, மின்சாரம் மற்றும் ரேஷன் கடைகள் குறித்தான புகார்களை 155340 என்ற தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். குறிப்பாக தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீர் பிரச்சனை இருந்தால் 1916 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க
Similar News
News August 11, 2025
வேலூரில் மனித கழிவுகளை அகற்ற இனி ரோபோக்கள்

வேலூர் மாநகராட்சியில், மனித கழிவுகளை அகற்றும் பணியில் இனி தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இந்த வேலையைச் செய்ய ரோபோட்டிக் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இந்த இயந்திரங்கள் பணியாளர்களின் சுகாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும். விரைவில் இவை பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News August 11, 2025
வேலூர் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு

வேலூர் மாவட்டத்தில் வாழை, கத்திரி, மஞ்சள், தக்காளி போன்ற தோட்டக்கலைப் பயிர்களுக்கு பயிர்க் காப்பீடு செய்ய தோட்டக்கலைத் துறை அறிவித்துள்ளது. இயற்கை சீற்றங்கள், பூச்சி மற்றும் நோய் தாக்குதல்களால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இந்த காப்பீடு பாதுகாப்பளிக்கும் என தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
News August 11, 2025
வேலூரில் ஆதார் கார்டு உள்ளவர்கள் கவனத்திற்கு…

உங்கள் ஆதார் கார்டுடன் Address Proof-ஐ இணைத்து விட்டீர்களா? இல்லையெனில், இந்த <