News May 7, 2025

பங்குச் சந்தையில் பச்சைக் கொடி.. மாத இறுதியில் ஹேப்பி

image

மாத இறுதி நாளான இன்று இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனேயே காணப்படுகின்றன. சென்செக்ஸ் 110 புள்ளிகள் அதிகரித்து 80,373 புள்ளிகளில் வர்த்தமாகி வருகிறது. அதேபோல், நிப்ஃடி 26 புள்ளிகள் உயர்ந்து 24,362 புள்ளிகளை பெற்றுள்ளது. HDFC LIFE பங்குகள் இன்று அதிக லாபத்தில் உள்ளன. அதேநேரத்தில், இன்டஸ்இன்ட் வங்கி, பஜாஜ் ஃபின்செர்வ் உள்ளிட்டவற்றின் பங்குகள் இறங்குமுகத்தில் இருக்கின்றன.

Similar News

News August 13, 2025

ஃபோனில் நிலநடுக்க அலர்ட் வரணுமா? இத ON பண்ணுங்க..

image

நிலநடுக்கம் தொடர்பான எச்சரிக்கையை உங்கள் ஃபோனில் பெற இந்த Setting-ஐ ON செய்தால் போதும்..
▶உங்கள் போன் Android 5.0 அல்லது அதற்கு மேற்பட்ட வெர்ஷனில் இருக்க வேண்டும்.
▶இண்டர்நெட், லொகேஷனை ON செய்யுங்கள்
▶போனில் உள்ள ‘Settings’க்கு செல்லுங்கள்.
▶அங்கு ‘Safety & Emergency’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யுங்கள். ▶பிறகு ‘Earthquake Alerts’ ஆப்ஷனை தேடி அதனை ON செய்து வைத்துக்கொள்ளவும்.

News August 13, 2025

இந்தியாவில் 2030 காமன்வெல்த் போட்டிகள்

image

2030 காமன்வெல்த் போட்டிகளை இந்தியாவில் நடத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பிடம் இந்தியா தனது விண்ணப்பத்தை விரைவில் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, போட்டிகளை அகமதாபாத்தில் நடத்த பரிந்துரை செய்யப்பட்டதால், சமீபத்தில் காமன்வெல்த் கூட்டமைப்பு அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு செய்து குஜராத் அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.

News August 13, 2025

பாலியல் குற்றவாளி கெபிராஜுக்கு 10 ஆண்டு சிறை

image

பயிற்சிக்கு சென்ற மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கராத்தே மாஸ்டர் கெபிராஜுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. சென்னை அண்ணாநகரில் கராத்தே பயிற்சி நடத்தி வந்த கெபிராஜ், மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் 2021-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில், கெபிராஜுக்கு இன்று தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!