News May 7, 2025

சிவகங்கை கோயில்களில் வேலை – இன்றே கடைசி.!

image

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோயில்களில் காலியாக உள்ள 51 பாதுகாப்பு பணிக்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியானது. கடந்த மார்ச்.28ஆம் தேதி விண்ணப்பம் தொடங்கிய நிலையில், இதில் விண்ணப்பிக்க இன்று (ஏப்.30) கடைசி நாள். தகுதியான நபர்களுக்கு 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து மேலும் அறிந்து கொள்ளலாம். Share.

Similar News

News August 20, 2025

சிவகங்கை: உயர்வுக்கு படி முகாம் தேதி அறிவிப்பு

image

சிவகங்கை மாவட்டம் 2024-25ஆம் கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பயின்ற, தேர்ச்சி / தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மொத்தம் 1,292 மாணவர்கள் பயன்பெறும் வகையில், வரும் 22.8.2025 அன்று சிவகங்கை மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாக கூட்டரங்கில், “உயர்வுக்குப்படி முகாம்-2025” நடைபெறவுள்ளது. இதில் மாணவர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

நாளை நடைபெறும் முகாம் அட்டவணை

image

காரைக்குடி, சிவகங்கை, தேவகோட்டை, காளையார் கோவில், திருப்பத்தூர், சிங்கம்புணரி உட்பட்ட பகுதிகளில் நாளை (ஆக.21) நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமிற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. காலை 10 மணி முதல் மாலை 3:30 மணி வரை நடைபெற இருப்பதால் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை கொடுத்து பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.

News August 20, 2025

மனித நேய ஜனநாயக கட்சி பதில் அளிக்க உத்தரவு

image

சிவகங்கை மாவட்ட மனித நேய ஜனநாயக கட்சி சென்னையில் உள்ள முதன்மைத் தேர்தல் அலுவலகத்தில் வரும் 26.8.25ஆம் தேதிக்கு முன்னர் நேரில் ஆஜராகி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின்னரும் கடந்த 6 ஆண்டுகளாக எவ்வித தேர்தலிலும் பங்கேற்காததன் காரணத்தை விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி இன்று (ஆக.20) தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!