News April 30, 2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜமாபந்தி- ஆட்சியர் அறிவிப்பு

மயிலாடுதுறை, குத்தாலம், சீர்காழி, தரங்கம்பாடி ஆகிய 4 தாலுகாகளிலும் வருகிற மே 8ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை வருவாய் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நடைபெற உள்ளது. இதற்காக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் வேளாண்துறை, தோட்டக்கலை துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கை மனுக்களை நேரடியாக வருவாய் தீர்வாய அலுவலரிடம் வழங்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 28, 2025
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சீர்காழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த சுபாஷ் (25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷை போலீசார் கைது செய்தனர்
News December 28, 2025
மயிலாடுதுறை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

சீர்காழி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் பரிசோதனை செய்தார். இதில் சிறுமி 6 வாரம் கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்தது. இதுகுறித்து சீர்காழி மகளிர் காவல் நிலைய போலீசார் நடத்திய விசாரணையில் கடலூரை சேர்ந்த சுபாஷ் (25) என்பருடன் பழக்கம் ஏற்பட்டதால் சிறுமி கர்ப்பம் அடைந்தது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் சுபாஷை போலீசார் கைது செய்தனர்
News December 28, 2025
மயிலாடுதுறை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் பொருட்டு மாவட்ட காவல் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனையடுத்து பொதுமக்கள் இணையத்தில் போலி முதலீட்டு திட்டங்களில் நம்பி முதலீடு செய்து தங்களது பணத்தை இழக்க வேண்டாம் எச்சரிக்கையுடன் இருக்கும்படி மாவட்ட காவல்துறை அறிவுறுத்தி உள்ளது.


