News April 30, 2025
சூர்யவன்ஷியின் அடுத்த இலக்கு இதுதான்!

இந்திய அணியில் இடம்பிடிப்பதற்காக இன்னும் கடுமையாக உழைப்பேன் என RR வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்துள்ளார். நாட்டுக்காக விளையாடி, சிறந்த பங்களிப்பை கொடுப்பதே தனது லட்சியம் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், தான் கொண்டாடப்படுவதற்கு மூலக் காரணம் தனது பெற்றோர்கள் பட்ட கஷ்டம் தான் எனவும் கூறியுள்ளார். GT-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 35 பந்துகளுக்கு சதம் விளாசி பல சாதனைகளை அவர் படைத்தார்.
Similar News
News April 30, 2025
பள்ளிகளில் பயிற்சி வகுப்புகள் கூடாது.. அதிரடி உத்தரவு!

மதுரையில் தனியார் நர்சரி பள்ளியில் 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தின் எதிரொலியாக கலெக்டர் சங்கீதா அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். கோடை விடுமுறை நாள்களில் பள்ளிகளில் அனுமதியின்றி பயிற்சி வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதேபோல், TN முழுவதும் வகுப்புகள் நடக்கிறதா என ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை குரல்கள் எழுந்துள்ளன.
News April 30, 2025
க.பொன்முடி வெளியே.. கௌதம சிகாமணி உள்ளே?

2026-ல் பொன்முடியை கழட்டிவிடும் முடிவில் இருக்கிறதாம் திமுக. சர்ச்சை பேச்சால் கட்சிப் பதவியை இழந்தவர், இப்போது அமைச்சர் பதவியையும் இழந்து நிற்கிறார். இந்நிலையில், பொன்முடிக்கு பதிலாக 2026-ல் அவருடைய மகன் கௌதம் சிகாமணி திருக்கோயிலூர் தொகுதியில் நிறுத்தப்படுவார் என்கிறார்கள். இதனால் தான், நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு சீட் வழங்கப்படவில்லையாம். எதிர் கோஷ்டிகளை மகனை கொண்டு சமாளிப்பாரா பொன்முடி?
News April 30, 2025
நியூசிலாந்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். Invercargill நகரிலிருந்து 300 கி.மீ தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. சேதம் குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை. சமீப காலமாக இந்தோனேசியா, மியான்மர் உள்ளிட்ட நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.