News April 30, 2025
IPL: KKR அபார வெற்றி

DC அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில், KKR அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த KKR அணியின் ரகுவன்ஷி அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்தார். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. இதனை சேஸ் செய்த DC அணியின் டுப்ளசி 62 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இலக்கை எட்ட முடியாமல் DC அணி தோல்வியை தழுவியது.
Similar News
News April 30, 2025
தொகுதியை டிக் செய்த விஜய்.. இங்கேயா போட்டி?

2026 தேர்தலில் கோவையில் விஜய் போட்டியிட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால்தான், முதல் பூத் கமிட்டி கருத்தரங்கை அங்கு நடத்தியதாம், அங்கு கிடைக்கும் ரெஸ்பான்ஸை பார்த்து முடிவெடுக்கலாம் என தவெக தரப்பு நினைத்ததாம். ஆனால், நினைத்ததை விட நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்ததால், ஏறக்குறைய அத்தொகுதியை விஜய் உறுதி செய்ததாகக் கூறப்படுகிறது. இருப்பினும் மற்ற தொகுதிகளிலும் பல்ஸ் பார்க்கப்படுமாம்.
News April 30, 2025
அட்சய திருதியையில் தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு

கங்கை நதி விண்ணிலிருந்து பூமியை முதன்முதலில் தொட்ட நாள் அட்சய திருதியை என நம்பப்படுகிறது. இன்று தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதால், அவை மென்மேலும் வாங்கக்கூடிய யோகத்தை வழங்கும் என்பார்கள். தங்கம் வாங்குவதற்கு இது மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்ச்சியான செல்வ வளர்ச்சியை உறுதி செய்கிறது. இன்று தங்கம் வாங்க சிறந்த நேரம் காலை 5:40 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.
News April 30, 2025
உள்ளாட்சித் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையர் அதிரடி!

உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் காலியாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்திய அவர், வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த அறிவுறுத்தினார்.