News April 30, 2025
ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து காவல்துறை விவரம்

இன்று (ஏப்ரல் 29) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
Similar News
News November 2, 2025
ராமேஸ்வரம்: இலங்கைக்கு பத்திகள் கடத்த முயற்சி

ராமேஸ்வரம் சேரான்கோட்டை கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த 720 பாக்கெட் கொசு விரட்டும் பத்திகளை ராமநாதபுரம் கியூ பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையில் போலீசார் இன்று (நவ.2) அதிகாலை கைப்பற்றினர். வாகனத்துடன் தப்ப முயன்ற முனீஸ்குமார்,
ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை பிடித்து விசாரிக்கின்றனர். பிடிபட்ட 2 பேர், கைப்பற்றிய வாகனம், கொசு விரட்டும் பத்திகளை ராமேஸ்வரம் கஸ்டம்ஸ் அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளனர்.
News November 2, 2025
இராமநாதபுரத்தில் இலவச வீடு வேண்டுமா?

திருப்புல்லாணி ஊராட்சி, குதக்கோட்டையில் 2023 – 2024 ஆண்டு ஒதுக்கீட்டில் பெரியார் நினைவு சமத்துவபுரம் கட்டப்பட்டு வருகிறது. 100 வீடுகளுக்கு பயனாளிகள், தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். (நவ.5) மாலை 5 மணிக்குள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டாரவளர்ச்சி அலுவலரிடம் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவித்துள்ளார்.
News November 2, 2025
ராம்நாடு: கபாடி வீரர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு அமெச்சூர் கபாடி அசோசியேஷன் நடத்தும் மாவட்ட ஜூனியர் சாம்பியன்ஷிப் கபாடி போட்டி தினையத்தூரில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7.11.2025 முதல் 9.11.2025 வரை நடைபெறுகிறது. இதற்காக ராம்நாடு ஜூனியர் கபாடி வீரர்கள் தேர்வு ஞாயிற்றுக்கிழமை திருவாடானை வட்டம், தினையத்தூர், TNR விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. 18.01.2006 க்குள் பிறந்தவர்கள், 75 கிலோ எடை, ஆதார் ஜெராக்ஸ் கொண்டு வரவும். SHARE IT.


