News April 29, 2025

திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

image

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.

Similar News

News November 6, 2025

புது Syllabus-ஐ உருவாக்க உயர்மட்டக்குழு: அரசாணை

image

NEP-ஐ தமிழ்நாடு எதிர்த்து வருவதோடு, தனியாக மாநில கல்விக்கொள்கையும் வடிவமைத்து வெளியிட்டது. இந்த TSEP-ஐ பின்பற்றி பாடத்திட்டங்களை உருவாக்க உயர்மட்டக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில், ISRO தலைவர் நாராயணன் உள்ளிட்ட 13 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பாட வல்லுநர்கள் அடங்கிய குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

News November 6, 2025

பிஹார் தேர்தல்: மோடி, ராகுல் வேண்டுகோள்

image

பிஹாரில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி முழு உற்சாகத்துடன் வாக்களிக்குமாறு பிஹார் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்முறை வாக்காளர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார். இதனிடையே, நேற்று ராகுல் காந்தி வாக்குத் திருட்டை முறியடித்து, விழிப்புடன் செயல்பட்டு பிஹாரின் எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டும் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

News November 6, 2025

மகளிர் உரிமைத்தொகை ₹1000.. வெளியான புதிய அப்டேட்

image

மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பித்து லட்சக்கணக்கான குடும்ப தலைவிகள் காத்திருக்கின்றனர். இதில், எத்தனை பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில், குடும்பத் தலைவிகளின் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருவதாகவும், குறைந்தது 3 லட்சம் பெண்களுக்கு புதிதாக மகளிர் உரிமைத்தொகை ₹1000 வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

error: Content is protected !!