News April 29, 2025

IPL: DC அணிக்கு 205 ரன்கள் இலக்கு

image

டெல்லியில் நடைபெற்று வரும் IPL போட்டியில், DC அணிக்கு 205 ரன்களை இலக்காக நிர்ணயித்திருக்கிறது KKR. டாஸ் வென்ற DC அணியின் கேப்டன் அக்சர் படேல், பவுலிங் செய்ய தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய KKR அணியின் வீரர்கள் அனைவரும் நிலைத்து விளையாடி ரன் சேர்த்தனர். அதிகபட்சமாக ரகுவன்ஷி 44 ரன்கள் குவித்தார். பின்னர், 20 ஓவர்கள் முடிவில் KKR 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் எடுத்தது.

Similar News

News April 30, 2025

அட்சய திருதியையில் தங்கம் வாங்குவோர் கவனத்திற்கு

image

கங்கை நதி விண்ணிலிருந்து பூமியை முதன்முதலில் தொட்ட நாள் அட்சய திருதியை என நம்பப்படுகிறது. இன்று தங்கம், வெள்ளி போன்றவற்றை வாங்குவதால், அவை மென்மேலும் வாங்கக்கூடிய யோகத்தை வழங்கும் என்பார்கள். தங்கம் வாங்குவதற்கு இது மிகவும் புனிதமான நாட்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இது தொடர்ச்சியான செல்வ வளர்ச்சியை உறுதி செய்கிறது. இன்று தங்கம் வாங்க சிறந்த நேரம் காலை 5:40 மணி முதல் மதியம் 12:00 மணி வரை.

News April 30, 2025

உள்ளாட்சித் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையர் அதிரடி!

image

உள்ளாட்சி இடைத்தேர்தலை சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த வேண்டும் என கலெக்டர்களுக்கு மாநில தேர்தல் ஆணையர் ஜோதி நிர்மலாசாமி அறிவுறுத்தியுள்ளார். திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் காலியாக இருக்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடு குறித்து ஆலோசனை நடத்திய அவர், வெளிப்படைத் தன்மையுடன் தேர்தலை நடத்த அறிவுறுத்தினார்.

News April 30, 2025

34 வருடத்தில் 57 முறை டிரான்ஸ்ஃபர்.. இன்றுடன் ஓய்வு!

image

34 ஆண்டுகால சர்வீஸில் இருந்து ஐஏஎஸ் அதிகாரி அஷோக் கேம்கா இன்று ஓய்வு பெறுகிறார். நேர்மைக்கு பெயர் போன இவர், இதுவரை 57 முறை பணியிடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். சோனியா காந்தியின் மருமகன் ராபர் வதேரா தொடர்புடைய நில ஒப்பந்தத்தை ரத்து செய்து, தேசிய அளவில் பிரபலமானார். ஊழலை வேரோடு ஒழிப்பதே தனது லட்சியம் என கூறி வந்தவர், ஹரியானா போக்குவரத்து துறை கூடுதல் செயலாளராக இன்று ஓய்வு பெறுகிறார்.

error: Content is protected !!