News April 29, 2025

கிராம சபைக் கூட்டம் குறித்து அறிவித்த ஆட்சித்தலைவர்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 333 கிராம ஊராட்சிகளிலும் வருகின்ற மே1 தொழிலாளர் தினத்தன்று வியாழக்கிழமை காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த  கூட்டத்தினை மேற்பார்வையிட ஊராட்சிகள் அளவில் தொகுதி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேற்படி கிராம சபா கூட்டம் சிறப்பாக நடைபெற அனைத்து தனி அலுவலர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

கிருஷ்ணகிரி மக்களே கேஸ் புக் பண்ண ஒரு Hi போதும்!

image

வாட்ஸ்அப் மூலமாக கேஸ் சிலிண்டர் புக் செய்வது மிகவும் எளிதான மற்றும் விரைவான வழியாகும். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களில் உங்கள் கேஸ் நிறுவனத்தின் எண்ணை போனில் SAVE செய்துவிட்டு, வாட்ஸ்அப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!

News December 25, 2025

கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி… ஒரே நாளில் 5 வீடுகளில் கொள்ளை

image

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே சுண்டம்பட்டியில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக்கு சென்ற 5 பேரின் வீடுகளுக்குள் புகுந்து மர்ம நபர்கள்
கொள்ளை அடித்து சென்றுள்ளனர். 30 சவரன் நகை, 1 கிலோ வெள்ளி மற்றும் பணம் திருடிச் சென்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில், பர்கூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 25, 2025

கிருஷ்ணகிரி: ஆம்புலன்ஸ் அப்பளம் போல் நொறுங்கி விபத்து!

image

ஓசூரில் இருந்து கிருஷ்ணகிரி செல்லும் நெடுஞ்சாலையில், இன்று(டிச.25) அதிகாலை 5.30 மேல் சின்னர் என்னும் இடத்தில் பிரேக் டவுன் ஆன லாரியின் மீது கேரளாவை சேர்ந்த ஆம்புலன்ஸ் மோதி விபத்துக்குள்ளானது. இந்த வாகனத்தை இயக்கிய ஜோஜி என்பவர் வாகனத்தின் உள் சிக்கிக்கொண்டார். 1:30 மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு 108 & தீயணைப்பு துறையினர் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அவரை மிட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

error: Content is protected !!