News April 29, 2025
அரியலூர்: பிரிந்த தம்பதியரை ஒன்று சேர்க்கும் ஆலந்துறையார்

அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் உள்ளது, அருந்தவ நாயகி உடனாய ஆலந்துறையார் கோயில். இங்குள்ள மூலவர் ஆலந்துறையார், அருந்தவநாயகி ஆவர். சிவபெருமானை பிரிந்து சென்ற பார்வதி தேவி இங்கு தவம் செய்து மீண்டும் சிவபெருமானுடன் சேர்ந்தார். ஆகையால் இங்கு வழிபட்டால் பிரிந்த தம்பதியரும் சேருவர் என கூறுகின்றனர். மேலும் இங்கு வழிபட்டால் மாத்ருஹத்தி தோஷம், திருமணத் தடை போன்றவையும் நீங்கும் என்கின்றனர். இதை பகிரவும்
Similar News
News August 16, 2025
அரியலூர்: பணம் அச்சடிக்கும் நிறுவனத்தில் வேலை!

ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் பணம் அச்சடிக்கும் தொழிற்சாலையான (BRBNMPL) நிறுவனத்தில் காலி பணியிடங்கள் நிரப்படவுள்ளது. கல்வி தகுதி, Deputy Manager பதவிக்கு B.E , B.Tech மற்றும் Process Assistant Grade-I பதவிக்கு ITI , Diploma முடித்திருக்க வேண்டும். Rs.24,500 முதல் Rs.88,638 வரை சம்பளம் வழங்கப்படும். நேர்முக தேர்வுக்கு செல்ல விரும்பினால் <
News August 16, 2025
அரியலூர்: இலவச வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி! APPLY NOW

தமிழ்நாடு (தாட்கோ) அமைப்பு மூலம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு, வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி வழங்கப்படவுள்ளது. வயது வரம்பு 18-30 இருக்க வேண்டும். கல்வித்தகுதி பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி சான்றிதழ் மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழிவகை செய்யப்படும். இப்பயிற்சினை பெற இங்கே<
News August 16, 2025
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலமாக தனியார்த் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. ஜெயங்கொண்டம் தா.பழூர் சாலையில் உள்ள க.சொ.க.கண்ணன் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாகத்தில் ஆகஸ்ட் 18 காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை முகாம் நடைபெற உள்ளது. 8ஆம் வகுப்பு முதல் மேல்படிப்பு படித்த மாணவ மாணவிகள் வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.