News April 29, 2025

பாக். பேரழிவை சந்திக்கும்.. தீர்க்கதரிசி கணிப்பு

image

பல்கேரியாவை சேர்ந்த தீர்க்கதரிசி பாபா வாங்கா. இவரது கணிப்புகள் 85% துல்லியமாக பலித்துள்ளன. பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா-பாக். இடையே பதற்றம் நிலவும் நிலையில், 2025-ல் பாக். பேரழிவை சந்திக்கும் என பாபா வாங்கா கணித்துள்ளார். இதனால் நிச்சயம் இந்தியா-பாக். போர் மூளும் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். இதெல்லாம் சும்மா என இன்னொரு தரப்பினர் மறுக்கின்றனர். நீங்க என்ன நினைக்கிறீங்க?

Similar News

News April 30, 2025

மே 29-ல் வரலாறு படைக்கும் இந்தியர்!

image

இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா வரும் மே 29-ம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்ல உள்ளார். அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் SpaceX Felcon ராக்கெட் மூலம் அவர் விண்வெளிக்கு அனுப்பப்பட உள்ளார். Axiom 4 என்ற தனியார் திட்டத்தின் ஒரு பகுதியாக அவர் இப்பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இதன்மூலம், சர்வதேச விண்வெளி மையம் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற உள்ளார்.

News April 30, 2025

இந்தியாவில் வேகமெடுக்கும் ஐபோன் உற்பத்தி

image

ஒசூரில் புதிதாக அமைக்கப்பட்ட டாடா எலக்ட்ரானிக்ஸ் ஆலையில் பழைய ஐபோன் மாடல்களின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளன. அதேபோல், பெங்களூருவில் உள்ள ஃபாக்ஸ்கான் ஆலையில், புதிய ஐபோன் 16 மாடல்களின் உற்பத்தி விரைவில் தொடங்கப்பட உள்ளன. சீன இறக்குமதி பொருள்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதித்த நிலையில், இந்தியாவில் ஐபோன் உற்பத்தியை அதிகரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

News April 30, 2025

நேருவின் பொன்மொழிகள்

image

*கடப்பதற்கு தடைகளும் தீர்ப்பதற்கு பிரச்னைகளும் இல்லை என்றால் வாழ்க்கை உப்பு சப்பற்று போய்விடும். *செயலுக்கு முன்பே விளைவுகள் குறித்து எண்ணி அஞ்சுகின்ற கோழைக்கு வெற்றி என்பது வெகுதூரம். *உண்மையை சில சமயம் அடக்கி வைக்க முடியும் ஆனால் ஒடுக்கிவிட முடியாது. *அச்சம் போன்று மிக மோசமாக ஆபத்து எதுவுமில்லை. *தோல்வி என்பது அடுத்த காரியத்தை கவனமாக செய் என்பதற்கான எச்சரிக்கை.

error: Content is protected !!