News April 29, 2025
14 தனிப்பிரிவு போலீசார் அதிரடி மாற்றம்

எம்.புதுப்பட்டி காவல் நிலையத்தில் தனிப்பிரிவில் பணியாற்றி வந்த ஜெயக்குமார், மல்லி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி டவுன் காவல் நிலைய தலைமை காவலர் சண்முகராஜ், மாரனேரி காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், மாரனேரி காவல் நிலைய தலைமை காவலர் கார்த்தி, சிவகாசி டவுன் காவல் நிலைய தனிப்பிரிவிற்கும், சிவகாசி கிழக்கு காவல் நிலைய தலைமை காவலர் பாலசுப்பிரமணியன் திருத்தங்கல்லுக்கும் மாற்றம் செய்யப்பட்டனர்.
Similar News
News November 30, 2025
விருதுநகர்: இலவச தையல் மிஷின் பெற விண்ணப்பிக்கலாம்

விருதுநகரில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மதுரை மாவட்ட சமூக நல அலுவலரை அணுகவும். எல்லோருக்கும் SHARE செய்யவும்.
News November 30, 2025
ராஜபாளையம் அருகே கண்மாயில் காவலாளி சடலமாக மீட்பு

ராஜபாளையம் அருகே சேத்தூரைச் சோ்ந்த அம்மையப்பன் இவா் நல்லமங்கலம் கண்மாய் காவலாளியாக பணிபுரிந்து வந்தாா். இந்தநிலையில், கண்மாய் குத்தகைதாரா் சமையலுக்கு பொருள்கள் வாங்கிக்கொண்டு கண்மாய்க்கு சென்றாா். அப்போது, அங்கு அம்மையப்பன் இல்லை. அவரைத் தேடிப் பாா்த்தபோது கண்மாய் கலிங்கல் அருகே அவா் இறந்து கிடந்தாா். இதுகுறித்து குத்தகைதாரா் அளித்த தகவலின் பேரில், தளவாய்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
News November 30, 2025
விருதுநகர்: காசநோய் மையத்தில் வேலை வாய்ப்பு

விருதுநகர் மாவட்ட காசநோய் மையத்தில் 11 மாதத்திற்கான ஒப்பந்த அடிப்படையிலான காசநோய் சுகாதாரப் பார்வையாளர் -1, காசநோய் ஆய்வக நுட்புனர் -1 தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் தங்கள் தகுதிக்கான சான்றிதழ்கள் மற்றும் டூவிலர் லைசன்ஸ் ஆகியவற்றின் சான்றொப்பமிட்ட நகல் மற்றும் ரூ.5-க்கானஅஞ்சல் வில்லை ஒட்டி மாவட்ட காசநோய் மையத்திற்கு அனுப்பலாம்.


