News April 29, 2025
ஏன் பயப்படுறீங்க சசி தரூர்? விளாசிய காங். தலைவர்

மோடியை புகழும் சந்தர்ப்பத்திற்காக சசி தரூர் காத்துக்கிடக்கிறார் என காங். தலைவர் உதித் ராஜ் விமர்சித்துள்ளார். பஹல்காம் தாக்குதலை அடுத்து, அரசின் பாதுகாப்பு செயல்பாடுகளை காங். உள்பட எதிர்க்கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், காங். MP சசி தரூர் மோடி அரசுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இந்த நிலையில், ED, CBI, IT ஏஜென்சிகளை கண்டு சசி தரூர் பயப்படுகிறார் என உதித் ராஜ் விமர்சித்துள்ளார்.
Similar News
News August 21, 2025
விந்தணு மூலம் குழந்தைக்கும் பரவும்… ஆய்வில் அதிர்ச்சி!

ஒரு ஆண், சிறு வயதில் அனுபவிக்க நேரும் மன அதிர்ச்சியின் நினைவுகள், மரபணு மூலம் அவரது அடுத்த சந்ததிக்கும் கடத்தப்படுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மன அதிர்ச்சியின் நினைவுகளால் ஏற்படும் ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் மற்றும் அழற்சி விளைவுகள், அவரின் விந்து செல்களின் மரபணுக்களில் பதிவாகி, அதன்மூலம் அவரின் குழந்தைக்கும் செல்கிறது. இதனால் குழந்தையின் மனநலமும் பாதிக்கலாம் என்கின்றனர்.
News August 21, 2025
மாநாடு சிறக்க வேண்டி யாகம் வளர்த்த தவெக!

மதுரையில் நாளை நடைபெற உள்ள தவெக மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டி, நிர்வாகிகள் யாகம் வளர்த்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத சடங்குகளுக்கு எதிரான பெரியாரை கொள்கை தலைவராக ஏற்றுக்கொண்டு, யாகம் நடத்தியதை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். அதேபோல் யாகம் வளர்த்த சில மணி நேரங்களிலேயே, மாநாட்டு திடலில் நிறுவப்பட்டு வந்த 100 அடி உயர கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்ததையும் டிரோல் செய்து வருகின்றனர்.
News August 21, 2025
‘குஷ்பு இட்லி’ என பெயர் வர இதுதான் காரணம்: குஷ்பு

‘குஷ்பு இட்லி’ என்ற பெயர் பிரபலமாக யார் காரணம் என்ற விவரத்தை குஷ்பு பகிர்ந்துள்ளார். ஒரு படத்தின் ஷூட்டிங்கின் போது, நடிகர் பிரபு தனது கன்னத்தை பிடித்து அப்படியே இட்லி மாதிரி இருக்கு என கூறியதாகவும், அப்போது முதல் அந்த வார்த்தை பிரபலமானதாகவும் அவர் நினைவுகூர்ந்துள்ளார். மேலும், அந்த டயலாக்கே அப்படத்தில் இல்லை எனவும், பிரபு எதார்த்தமாக அப்படி சொன்னதாகவும் தெரிவித்துள்ளார்.