News April 29, 2025

PM கிஷான் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்க முடிவு!

image

மத்திய அரசின் ‘PM கிஷான்’ உதவித்தொகையின் 20-வது தவணை ஜூன் மாதம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.8 கோடி விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். 19-வது தவணை ₹2000 கடந்த பிப்.24-ம் தேதி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வழங்கப்பட்ட நிலையில், 20-வது தவணையை ஜூன் மாதம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது. 18-வது தவணை அக்டோபரிலும், 17-வது தவணை ஜூன் 2024லும் வழங்கப்பட்டது.

Similar News

News April 30, 2025

பிரதமரை சந்தித்த RSS தலைவர்

image

எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் டெல்லியில் RSS தலைவர் மோகன் பகவத் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். காஷ்மீர் தீவிரவாதம் தொடர்பாக, இன்று அமித் ஷா தலைமையில் ஆலோசனை கூட்டமும், பிரதமர் தலைமையில் ஒரு ஆலோசனை கூட்டமும் நடைபெற்றது. நாளை அமைச்சரவையை கூட்டியிருக்கிறார் பிரதமர் மோடி. இந்நிலையில், மோகன் பகவத் பிரதமருடன் சந்திப்பு நடத்தியிருப்பது பேசு பொருளாகியிருக்கிறது.

News April 30, 2025

IPL: KKR அபார வெற்றி

image

DC அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில், KKR அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த KKR அணியின் ரகுவன்ஷி அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்தார். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. இதனை சேஸ் செய்த DC அணியின் டுப்ளசி 62 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இலக்கை எட்ட முடியாமல் DC அணி தோல்வியை தழுவியது.

News April 30, 2025

குளு குளு AC-யில் தூக்கமா? அப்போ உஷார்…

image

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள்? உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால், உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC அளவு 24°C – 26°C இருப்பதுதான் உடலுக்கு நல்லதாம்.

error: Content is protected !!