News April 29, 2025
7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: IMD

தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 7 நாள்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது. வேலூர், கரூர், ஈரோடு மாவட்டங்களில் கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர் மற்றும் காரைக்காலில் மாலை 4 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?
Similar News
News September 14, 2025
கவினுக்கு குரல் கொடுத்த விஜய் சேதுபதி

பிரபல டான்ஸ் மாஸ்டர் சதீஷ், கவினை வைத்து ‘கிஸ்’ என்ற படத்தை எடுத்துள்ளார். கவினின் ‘டாடா’ படத்துக்கு கிடைத்த வெற்றி, ப்ளடி பெக்கருக்கு கிடைக்கவில்லை. இதனால் கிஸ் படத்தை வெற்றிப்படமாக மாற்றும் வேலையில் அவர் பிஸியாக பணியாற்றி வருகிறார். செப்டம்பர் 19-ம் தேதி திரைக்கு வரும் இப்படத்துக்கு, விஜய் சேதுபதி வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளார்.
News September 14, 2025
வெறுப்புகளை விஷமாக அருந்துகிறேன்: PM மோடி

2019-ல் அசாமை சேர்ந்த பாடகர் பூபன் ஹசாரிக்காவுக்கு பாரத ரத்னா வழங்கப்பட்டதை காங்கிரஸ் விமர்சித்திருந்தது. இதற்கு PM மோடி பதிலடி கொடுத்துள்ளார். நான் சிவன் பக்தன் என்பதால், எனக்கு எதிராக வரும் வெறுப்பு பேச்சுகளை விஷம் போல் அருந்துவேன் எனக் குறிப்பிட்ட அவர், வேறு ஒருவரை அப்படி பேசினால் தன்னால் பொறுத்துக்கொள்ள முடியாது என எச்சரித்திருந்தார்.
News September 14, 2025
BREAKING: கனமழை கொட்டித் தீர்க்கும்.. அலர்ட்

வங்கக் கடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழகத்திற்கு கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. வரும் 17-ல் ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், சேலம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 20-ம் தேதி வரை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால், கவனமாக இருங்க நண்பர்களே!