News April 29, 2025
நாளை மத்திய அமைச்சரவைக் கூட்டம்!

டெல்லியில் PM மோடி தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் நாளை மீண்டும் கூடுகிறது. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, கடந்த 23-ம் தேதி நடந்த இக்கூட்டத்தில் பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற்றம், எல்லை மூடல், சிந்து நதி ஒப்பந்தம் நிறுத்திவைப்பு என முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 5 நாள்களாக எல்லையில் பரபரப்பு நிலவும் நிலையில், நாளை இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
Similar News
News September 4, 2025
தரையில் அமர்ந்து சாப்பிட்டா இவ்வளவு நன்மையா!

டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிடுவதை விட, தரையில் அமர்ந்து சாப்பிடுவது உடல்நலத்துக்கு பல நன்மைகளை கொடுக்கும் என்கின்றனர் சித்தா டாக்டர்கள். தரையில் தட்டை வைத்து, குனிந்து உணவை எடுத்துச் சாப்பிடுகையில் ஜீரணம் எளிதாகிறது. தசை- உடல்வலிகள் நீங்குகின்றன. எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் உணர்கிறோம். தரையில் அமர்ந்து சாப்பிடுவது அமைதியையும் தருகிறது என்கின்றனர். நீங்க எப்படி சாப்பிடுகிறீர்கள்?
News September 4, 2025
அரசியலில் இருந்து விலகும் செங்கோட்டையன்?

செங்கோட்டையன் நாளை என்ன பேசப்போகிறார் என்பதுதான் அரசியல் களத்தில் விவாதமாக மாறியுள்ளது. 9 முறை MLA, MGR, ஜெயலலிதாவின் நம்பிக்கையை பெற்ற தலைவர், 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் என செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கை மிக நீண்டது. ஆனாலும், EPS உடனான அதிருப்தி காரணமாக மீண்டும் சசிகலா, டிடிவி, OPS இணைப்பு (அ) அரசியலில் இருந்து விலகல் என இந்த 2 முடிவில் ஏதேனும் ஒன்றையே அவர் எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
News September 4, 2025
4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி, தென்காசி, தேனி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுகுறைந்தது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் 7-ம் தேதி வரை பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.