News April 29, 2025

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு

image

இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (ஏப்.28) பெய்த மழை அளவு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அதிகபட்சமாக மண்டபத்தில் 58.02 மில்லி மீட்டர், திருவாடானை 47.6 மில்லி மீட்டர், தங்கச்சிமடம் 30.6 மில்லி மீட்டர், பாம்பன் 30 மில்லி மீட்டர், தொண்டி 9 மில்லி மீட்டர், தீர்த்தாண்டதானம் 7.2 மில்லி மீட்டர், பள்ளமோர்குளம் 3 மில்லி மீட்டர், வட்டனம் 2.6 மில்லி மீட்டர், இராம்நாடு 1 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

Similar News

News August 20, 2025

ராமநாதபுர மாவட்டத்தில் இரவு ரோந்து செல்லும் காவல்துறை

image

இன்று (ஆகஸ்ட் 20) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.

News August 20, 2025

ராம்நாடு: மீனவர்களுக்கு நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 7 மீனவர்களை ஜூலை.13 அன்று இலங்கை கடற்படை கைது செய்தனர். இந்த வழக்கு 4-வது முறையாக இன்று ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில் வழக்கை விசாரித்த நீதிபதி 7 மீனவர்களில் படகு ஓட்டுனர் யார் என்பது விசாரணையில் தெரியவராதால் மீனவர்கள் 7 பேருக்கும் செப்.3 வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து உத்தரவிட்டார்.

News August 20, 2025

வீடியோ ஒளிப்பதிவு பயிற்சி பெற மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

ராம்நாடு ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் வெளியிட்ட அறிக்கையின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி மேம்பாட்டு கழகம் சார்பில் வீடியோ ஒளிப்பதிவு மற்றும் வடிவமைப்பு பயிற்சி பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு குறைவாகவும், 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தலும் அவசியம். மேலும் விவரங்களுக்கு www.tahdco.com என்ற இணையதளத்தை அணுகலாம்.

error: Content is protected !!