News April 29, 2025
விழுப்புரம்: பெட்ரோல் குண்டு வீசிய வாலிபருக்கு குண்டாஸ்

விழுப்புரத்தில் மொபைல் சர்வீஸ் கடையில் பெட்ரோல் குண்டு வீசிய வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தில் நேற்று (ஏப்.28) கைது செய்யப்பட்டார். விழுப்புரத்தை சேர்ந்த அருண்குமார், கடந்த மார்ச் 28ம் தேதி விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் உள்ள மொபைல் சர்வீஸ் கடையில் தகராறு செய்து பெட்ரோல் குண்டு வீசி தீ வைத்தார். டவுன் போலீசார் அவரை தேடி வந்த நிலையில், நேற்று அவரை குண்டாஸில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 29, 2025
விழுப்புரம் இரவு நேர ரோந்து காவலர்களின் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (29.04.2025) இரவு 10.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News April 29, 2025
விழுப்புரமும் நடிகர் திலகமும்

வரலாற்று சிறப்பு மிக்க விழுப்புரம் மாவட்டம் பல முக்கிய மனிதர்களை தந்துள்ளது. அதில் முக்கியமானவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் பூர்விகம் சூரக்கோட்டை என்பதில் என்ற மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் அவர் பிறந்தது என்னவோ விழுப்புரத்தில் தான். சிவாஜி நடிகரான பின்பு அவருக்கான பிறப்பு சான்றிதழை விழா ஒன்றில் விழுப்புரம் நகராட்சி அவருக்கு வழங்கியது குறிப்பிடதக்கது. ஷேர் பண்ணுங்க
News April 29, 2025
விழுப்புரம் மாவட்ட மக்கள் கவனத்திற்கு

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை தொடர்பாக ஏதேனும் புகார் இருப்பின் 9444982689, 04146-223628, 04146-222292, 04146-220059, 04146-227609 போன்ற எண்களில் மாவட்ட பொது சுகாதார துறையை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் அல்லது மாநில டோல் பிரீ எண் 104 ஐ தொடர்பு கொண்டு புகார் தெறிக்கலாம். மற்றவர்களும் தெரிந்து கொள்ள ஷேர் பண்ணுங்க.