News April 29, 2025

சிவகங்கை: சிறப்பு வகுப்புகளில் பங்கேற்கலாம் 

image

சிவகங்கை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு பயனுள்ள வகையில், கோடை கொண்டாட்டம் நிகழ்ச்சிகள் வரும் மே 2ஆம் தேதி முதல் தொடங்கி மே.17ஆம் தேதி வரை சிவகங்கையில் உள்ள மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், காரைக்குடியில் உள்ள அழகப்பா மாதிரி பள்ளியிலும் சிறப்பு பயிற்சிகள் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார். *ஷேர் பண்ணுங்க

Similar News

News April 29, 2025

கொம்பன் காளையை கண்டுபிடித்தால் ரூ.30 ஆயிரம்

image

கண்டரமாணிக்கத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாபெரும் மஞ்சுவிரட்டு நடைபெற்றது. இந்த மஞ்சுவிரட்டில் அவிழ்த்துவிட்ட கொம்பன் காளை கே.வலையப்பட்டியில் பிடி கயிறுடன் சென்ற நிலையில் காளையை காணவில்லை, கொம்பன் என்று கூப்பிட்டால் ஓடிவரும் காளையை கண்டு பிடித்து கொடுத்தால் ரூ.30 ஆயிரம் வழங்கப்படும் என காளையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். 9326506153, 7094924233, 8939258484 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

News April 29, 2025

கிராம சபை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

தொழிலாளர் தினம் (01.05.2025) அன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராம சபைக் கூட்டத்தினை, ஊராட்சியின் எல்லைக்கு உட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி காலை 11.00 மணியளவில் கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும். எனவே, கிராம சபைக் கூட்டத்தில் பொதுமக்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட  ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

News April 29, 2025

தமிழ் கவிஞர் தூணிற்கு மாவட்ட ஆட்சியர் மரியாதை

image

சிவகங்கை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஒக்கூர் ஊராட்சியில் இன்று (29.04.2025) தமிழ்க்கவிஞர் நாளையொட்டி, சங்க கால நல்லிசைப் புலவர் ஓக்கூர் மாசாத்தியார் நினைவுத்தூணிற்கு, மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். உடன் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ச.சீதாலெட்சுமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!