News April 29, 2025
இந்த பாக். பெண் மட்டும் இந்தியாவில் இருப்பார்!

காதலனை கரம்பிடிக்க சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த சீமா ஹைதர் நாடு கடத்தப்படமாட்டார். அவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றாலும், இந்தியரை திருமணம் செய்து கொண்டதால், அவர் இந்திய நாட்டின் பிரஜையாகி விட்டார். இதன் காரணமாக சீமா இந்தியாவிலேயே இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருநாட்டு பிரச்னையில் பாகிஸ்தானியர்களை வெளியேற இந்திய அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 9, 2025
Depression-ஆல் தேம்பி அழுதேன்: பிரபல நடிகர்

கொரோனா ஊரடங்கின் போது மும்பையில் தனியாக இருந்ததால் மன அழுத்தத்துக்கு ஆளானதாக நடிகர் விஜய் வர்மா கூறியுள்ளார். தனிமையை தாங்கமுடியாததால் தேம்பி தேம்பி அழுததாகவும், படுக்கையை விட்டே நகராமல் இருந்ததாகவும் மனம் திறந்துள்ளார். இதனை கவனித்த அமீர் கானின் மகள் நடிகை ஐரா கான் வீடியோ காலில் தனக்கு உறுதுணையாக இருந்தார் என்றும், அதன்பிறகு மனநல டாக்டரிடம் இதுகுறித்து ஆலோசித்ததாகவும் அவர் தெரிவித்துளார்.
News November 9, 2025
விஜய் + அதிமுக + பாஜக கூட்டணி… முடிவை அறிவித்தார்

NDA-வில் தவெகவை சேர்க்க வேண்டும் என்பதே EPS-ன் எண்ணமாக இருக்கிறது. கூட்டணியில் இருக்கும் தமாகா தலைவர் GK வாசனும் அதே முடிவையே அறிவித்துள்ளார். பொது எதிரியான திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற நோக்கில் விஜய் தங்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார். அப்படி நடந்தால், 2026 தேர்தலில் திமுகவின் தோல்வி உறுதி என்றும் GK வாசன் குறிப்பிட்டுள்ளார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News November 9, 2025
இந்த நாடுகளில் வாழும் குழந்தைகள் பாவம்!

உலகம் முழுவதும் போர் பிரதேசங்களில் வாழும் குழந்தைகள் எண்ணிக்கை 2024-ல் 4.7 கோடியில் இருந்து அதிகரித்து சுமார் 5.2 கோடியாகிவிட்டது. இதனை ‘Save the Children’ அமைப்பு புதிய அறிக்கையில் கூறியுள்ளது. இது பெரும் கவலையை ஏற்படுத்துகிறது. அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள் என்னென்ன என்று, மேலே போட்டோக்களில் கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதை SHARE பண்ணுங்க.


