News April 29, 2025

ஆரணி அருகே பட்டா கத்தியுடன் ரீல்ஸ்

image

ஆரணி அடுத்த நெசல் சாலையில் நேமிக்குமார்(20) என்ற இளைஞர் பட்டா கத்தியுடன் செல்போனில் ‘ரீல்ஸ்’ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். இதை பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் ஆரணி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். ரீலிஸ் மோகத்தில் வெத்து சீன் போட்ட நேமிக்குமார் தற்போது வேலூர் மத்திய சிறையில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். 

Similar News

News September 17, 2025

தி.மலையில் கரண்ட் கட்!

image

தி.மலை, செங்கம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால் நாளை (செப்.,18) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செங்கம் டவுன், திருவள்ளுவர் நகர், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகர், மேல்செங்கம், வளையாம்பட்டு, நீப்பத்துறை, காயம்பட்டு, அரசங்கன்னி, நீப்பத்துறை, ஆண்டிப்பட்டி, பரமனந்தல், குப்பநத்தம் & அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்ட்டுள்ளது.

News September 17, 2025

தி.மலை: உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்!

image

தி.மலை மக்களே, தமிழ்நாடு அரசின் சேவைகளை பெற நீங்க அலைய வேண்டாம். வாரிசு சான்றிதழ், வருமான சான்றிதழ், இருப்பிட சான்று, சாதி சான்றிதழ், பிறப்பு சான்று/இறப்பு சான்று, சொத்து வரி பெயர் மாற்றம், குடிநீர் இணைப்பு, பட்டா மாறுதல் & இணையவழி பட்டா போன்ற சேவைகளை நீங்கள் ஒரே இடத்தில் பெறலாம். இங்கு <>கிளிக் <<>>செய்து உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்களை தெரிந்துகொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க!

News September 17, 2025

தி.மலை: ரோந்து பணி காவலர்கள் விவரங்கள் வெளியீடு

image

திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையின் சார்பாக இன்று (செப்:16) இரவு ரோந்து பணியில் ஈடுபட உள்ள காவல்துறை அதிகாரிகள் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தங்களுடைய பகுதியில் சட்டத்திற்கு புறம்பாக செயல்படக்கூடிய நபர்கள் இருந்தாலோ அல்லது பாதுகாப்பின்மை பிரச்சனையை ஏற்பட்டாலோ அவர்களுடைய தொலைபேசி எண்கள் (அ) 100 என்ற எண்ணை அழைத்து புகார்களை பதிவு செய்யலாம்.

error: Content is protected !!