News April 29, 2025
அட்சய திருதியை நாளில் 5 பொருள்களை வாங்குங்கள்

அட்சய திருதியை நாளை (ஏப்.29) மாலை 5:31-க்கு தொடங்கி ஏப்.30-ம் தேதி பிற்பகல் 2:12-க்கு நிறைவடையும். இந்த நாளில் தானம் செய்வது, பொருள் வாங்குவது, வழிபாடு உள்ளிட்ட செயல்களை மேற்கொள்வது நற்பலன்கள் தரும் என்பது நம்பிக்கை. தங்கம் வாங்குவது மங்களகரமான தொடக்கமாக கருதப்பட்டாலும், நவதானியங்கள், மண்குடம், பித்தளை-செம்பு பாத்திரங்கள், மஞ்சள், புத்தகங்கள், உப்பு போன்றவற்றையும் வாங்கலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News October 14, 2025
டிராவில் முடிந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டி

மலேசியாவில் நடைபெற்று வரும் சுல்தான் ஆஃப் ஜோகூர் கோப்பை ஹாக்கி போட்டியில் இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதின. முதலில் 0-2 என்று பின்தங்கி இருந்த இந்தியா பின்னர் சுதாரித்துக்கொண்டு அடுத்தடுத்து கோல்களை அடித்தது. இதனால் 3-2 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையும் பெற்றது. ஆனால் கடைசி நேரத்தில் பாகிஸ்தான் மேலும் ஒரு கோலை அடித்து சமன் செய்தது. புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது.
News October 14, 2025
முதலீடுகளை ஈர்ப்பதில் ஏமாற்றும் திமுக: அன்புமணி

முதலீடுகளை ஈர்க்கும் விஷயத்தில் தொடர்ந்து பொய்யான தகவல்களை தமிழக அரசு வழங்கி வருவதாக அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார். ஃபாக்ஸ்கான் நிறுவனம் மூலம் ₹15,000 கோடி முதலீடு கிடைத்துள்ளதாக தமிழக அரசு கூறும் நிலையில், அதனை ஃபாக்ஸ்கான் நிறுவனம் மறுத்துள்ளதாக அன்புமணி குறிப்பிட்டுள்ளார். அதனால் திமுக ஆட்சியில் பெறப்பட்ட தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News October 14, 2025
வங்கி கடன்.. வந்தது HAPPY NEWS

ஓராண்டில் மட்டும் ரெப்போ வட்டி விகிதம் 1% வரை குறைந்ததால், கடன் வட்டி விகிதங்களை வங்கிகள் குறைத்து வருகின்றன. குறிப்பாக, இந்த மாதத்தில் பேங்க் ஆஃப் பரோடா, இந்தியன் வங்கி, IDBI வங்கி உள்ளிட்டவை கடனுக்கான MCLR விகிதங்களை 0.05% வரை குறைத்துள்ளன. அதனால், அந்த வங்கிகளில் வீடு, வாகன கடன் பெற்றவர்களின் EMI குறைந்துள்ளது. இது சிறிய தொகை என்றாலும், நீண்ட கால கடன் பெற்றவர்களுக்கு பலனாக அமையும். SHARE IT.