News April 29, 2025
PAK-கிற்கு வந்த துருக்கி ஆயுதங்கள்?

இந்தியா – பாக். இடையிலான பதற்றம் விரைவில் தணியும் என்று நம்புவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். இருப்பினும், பாக். மக்களுக்கு வலுவான ஆதரவை வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். துருக்கியின் ராணுவ சரக்குகளை ஏற்றிச் செல்லும் விமானங்கள், பாக்.-ல் தரையிறங்கியதாக தகவல் வெளியான நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இருப்பினும், எவ்வித ஆயுதங்களையும் அனுப்பவில்லை என துருக்கி மறுத்துள்ளது.
Similar News
News April 29, 2025
கூட்டணி கணக்கு.. அமித்ஷா – நயினார் சந்திப்பின் பின்னணி!

டெல்லி சென்றுள்ள TN பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அரை மணி நேரம் நீடித்த இந்த சந்திப்பில், 2026 சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணியை வலுப்படுத்துவது தொடர்பாகவும், தேர்தலை திறம்பட எதிர்கொள்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. மேலும், TN-ல் பாஜகவை வளர்ப்பது தொடர்பாக நயினாருக்கு பல்வேறு ஆலோசனைகளை அமித்ஷா வழங்கியதாகவும் கூறப்படுகிறது.
News April 29, 2025
கோலியின் மூளையில் என்ன இருக்கு தெரியுமா?

எத்தனையோ பேர் இருக்க கோலி மட்டும் எப்படி ரன் மிஷின் ஆனார்? கோலி மட்டுமல்ல, எல்லா ஜீனியஸ்களின் மூளை செயல்படும் விதத்திலும் ஒரு பேட்டர்ன் உண்டாம். அதை System 1, System 2 என உளவியலாளர்கள் பிரிக்கிறார்கள். சாதாரண யோசனைகளுக்கு System 1, மூளையைக் கசக்குகிற திட்டங்களுக்கு System 2. இந்த System 2-வை பயிற்சியின் மூலம் நம் System 1 ஆகவே மாற்றி சாதிக்கலாமாம். இப்போ தெரிகிறதா கோலி ஏன் கிங்குன்னு..
News April 29, 2025
இலவச பட்டா விதிகளில் திருத்தம்!

ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழங்கும் விதிகளில் அரசு திருத்தம் செய்துள்ளது. அதன்படி, 10 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு பட்டா வழங்குவதற்கான ஆண்டு வருமான வரம்பு ₹3 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 3 சென்ட் நிலம் வழங்கப்படும். இதில் 2 சென்ட் நிலத்திற்கு கட்டணம் இல்லை. மீதமுள்ள 1 சென்ட் நிலத்திற்கு அதன் மதிப்பில் 25% தொகையைச் செலுத்த வேண்டும்.