News April 29, 2025
கணவனுக்கு நேர்ந்த சோகம்.. பேரனுடன் ஓடிப்போன மனைவி!

உ.பி.யில் இந்திராவதி (50) என்ற பெண்மணி, தனது கணவன், 4 குழந்தைகளை கைவிட்டு பேரன் ஆசாத்துடன் (30) ஓடிப்போய் திருமணம் செய்த ஷாக் சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவர் புகார் அளித்த நிலையில், இருவரும் வயதுக்கு வந்தவர்கள் என்பதால் இணையை தேர்ந்தெடுப்பதற்கு உரிமை இருப்பதாக கூறி, போலீசார் புகாரை ஏற்க மறுத்துவிட்டனர். காதலுக்கு கண் இல்லை என்பார்கள், அதற்காக இப்படியுமா.
Similar News
News October 14, 2025
BREAKING: இரவில் விஜய்யை சந்தித்தார்

கடந்த 15 நாள்களாக தலைமறைவாக இருந்த தவெக இணைப் பொதுச் செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார் வெளியே வந்தார். செப்.27-ம் தேதி கரூரில் விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், N.ஆனந்த், நிர்மல்குமார் தலைமறைவாகினர். தற்போது, கரூர் வழக்கு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், முதல் ஆளாக வெளியே வந்த நிர்மல்குமார், இரவு விஜய்யை சந்தித்து 1 மணி நேரத்திற்கு ஆலோசனை நடத்தியுள்ளார்.
News October 14, 2025
கோயிலுக்குச் செல்லும் பொழுது.. இத மறக்காதீங்க!

எப்போதும் கோயிலுக்கு செல்லும் போது, சில விஷயங்களை அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் *பிறப்பு, இறப்பு தீட்டுக்களுடன் கோயிலுக்குள் செல்லக் கூடாது *வெறும் கையுடன் செல்லாமல், குறைந்தபட்சம் பூக்களையாவது கொண்டு செல்ல வேண்டும் *குளிக்காமல் கோயிலுக்குள் செல்லக் கூடாது * கைலி, தொப்பி, முண்டாசு அணிந்துகொண்டு செல்லக்கூடாது *ஈர துணி, அரைகுறை ஆடைகளுடன் கோயிலுக்குள் செல்லக்கூடாது. SHARE IT.
News October 14, 2025
இன்று முதல் 4 நாள்களுக்கு சட்டசபை கூட்டம்

தமிழ்நாடு சட்டசபை கூட்டம் இன்று தொடங்கி வரும் 17-ம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். இன்றைய கூட்டத்தில் சமீபத்தில் உயிரிழந்த முக்கியஸ்தர்கள், கரூர் துயரத்தில் பலியானவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். நாளை முதல் 2025-26-ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடைபெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.