News April 29, 2025
2,180 குடும்பங்கள் மொத்தமாக அழிப்பு

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட 52,243 பாலஸ்தீனியர்களில் 65% பேர் குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. 18,000 குழந்தைகள், 12,400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 2,180 குடும்பங்களை மொத்தமாக அழித்ததாகவும் கூறியுள்ளது. மேலும், 1,400 டாக்டர்கள், 212 செய்தியாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இத்தனை பேர் உயிரிழந்தும் இன்னும் போர் ஓய்ந்தபாடில்லை.
Similar News
News April 29, 2025
ஆன்லைன் ரம்மிக்கு எதிரான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது. ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த தமிழக அரசு விதிகளை வகுத்திருந்தது. இதை எதிர்த்து ப்ளே கேம்ஸ் 24*7 பிரைவேட் லிமிடெட் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்தன. எழுத்துபூர்வமான வாதங்கள் முடிந்ததால், தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
News April 29, 2025
₹800 கோடி.. தோனியின் வெற்றிக்கு காரணம் இவரே!

ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னாலும் ஒரு பெண் இருப்பார். தோனியின் வெற்றிக்கு பின்னிருக்கும் பெண், மனைவி சாக்சி அல்ல, மாமியார் ஷீலா சிங். தோனியின் ₹800 கோடி வணிக சாம்ராஜ்யத்தின் சக்சஸுக்கு அவரே காரணம். தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் CEO-வான அவர், 4 ஆண்டுகளில் நிறுவனத்தை சிகரத்தில் ஏற்றியுள்ளார். கார்ப்பரேட் நுணுக்கங்களை கணவரிடம் கற்றுக்கொண்ட ஷீலா, சாதித்தும் காட்டியுள்ளார்.
News April 29, 2025
பிரபல நடிகர் பிரகாஷ் பெண்டே காலமானார்!

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல பரிமாணங்களில் மராத்தி சினிமாவில் மிக பிரபலமாக இருந்த பிரகாஷ் பெண்டே(82) காலமானார். அவர் பாலு, சாட்டக் சாந்த்னி, நடே ஜாட்லே டான் ஜீவ்னே போன்ற மாபெரும் மராத்தி வெற்றி படங்களை இயக்கி, நடித்தும் இருக்கிறார். சினிமா துறையை தாண்டி இவர் ஒரு சிறந்த ஓவியரும் கூட. மும்பையிலுள்ள பல்வேறு கேலரிகளில் இவரின் ஓவிய கண்காட்சி நடத்தப்பட்டுள்ளன. #RIP.