News April 29, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: கொல்லாமை ▶குறள் எண்: 321 ▶குறள்: அறவினை யாதெனின் கொல்லாமை கோறல் பிறவினை எல்லாந் தரும். ▶பொருள்: எந்த உயிரையும் கொல்லாதிருப்பதே அறச்செயலாகும். கொலை செய்தல் தீயவினைகள் அனைத்தையும் விளைவிக்கும்.
Similar News
News December 22, 2025
புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன்: PV சிந்து

வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் அனைவருக்கும் உண்டு, 100% தகுதியுடன் இருந்தால் தான் சிறப்பாக செயல்பட முடியும் என்று PV சிந்து கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எவ்வளவு தான் அனுபவ வீராங்கனையாக இருந்தாலும் தொடர்ந்து புதுப்புது உக்திகளை கற்று வருகிறேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற்ற உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் காலிறுதியிலேயே சிந்து வெளியேறியிருந்தார்.
News December 22, 2025
பெர்னாட் ஷா பொன்மொழிகள்

*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது.
*பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
*எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர்.
News December 22, 2025
பள்ளிகளில் வகுப்புவாதம் கூடாது: கேரள அரசு

கேரளாவின் சில தனியார் பள்ளிகள் கிறிஸ்துமஸை கொண்டாட பல கட்டுப்பாடுகளை விதித்ததாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், பள்ளிகளை எப்போதும் வகுப்புவாத ஆய்வகங்களாக மாற்ற அனுமதிக்கப்பட மாட்டாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார். ஓணம், கிறிஸ்துமஸ், ரம்ஜான் ஆகிய பண்டிகைகளை அனைத்து பள்ளி மாணவர்களும் கொண்டாடுவதால், அது அவர்களுக்கு அன்பை கற்றுக்கொள்ள உதவுகிறது என்றார்.


