News April 29, 2025
முட்டை விலை மீண்டும் உயர்வு

மீன்பிடி தடைகாலம் இருப்பதால், முட்டைக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. அதனால், நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் உயர்ந்துள்ளது. 420 காசுகளாக இருந்த ஒரு முட்டையின் கொள்முதல் விலை 430 காசுகளாக அதிகரித்துள்ளது. இதனால், சில்லறை விற்பனையில் முட்டை விலை அதிகரிக்கும். அதேநேரத்தில், முட்டைக்கோழி(₹85), கறிக்கோழி(₹88) விலையில் மாற்றமில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
மே தின விடுமுறை: சிறப்பு பஸ்கள் அறிவிப்பு

மே தினம், வார விடுமுறையையொட்டி 2,119 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என TNSTC அறிவித்துள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி உள்ளிட்ட இடங்களுக்கு நாளை 565 பஸ்களும், வெள்ளி, சனிக்கிழமை 375 பஸ்களும் இயக்கப்படவுள்ளது. கோயம்பேட்டிலிருந்து நாகை, ஓசூர், பெங்களூருவுக்கு 100 பஸ்களும், கோவை, திருப்பூர், ஈரோட்டுக்கு 250 பஸ்களும், மாதவரத்தில் இருந்து 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன.
News April 29, 2025
வெளி மாநிலத்தவர்களுக்கு தனி ID கார்டு: அமைச்சர்

தமிழ்நாட்டில் பணியாற்றும் வடமாநிலத்தவர் எண்ணிக்கை குறித்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கணேசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடமாநிலத்தவர் வருகை அதிகரித்து வருவதாகவும், வடகிழக்கு மாநிலங்களில் இருப்பது போல, கண்காணிக்கும் முறையை கொண்டு வர வேண்டும் எனவும் சட்டப்பேரவையில் வேல்முருகன் MLA கோரிக்கை விடுத்தார். அதற்கு, ID கார்டு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என அமைச்சர் பதிலளித்தார்.
News April 29, 2025
கனடாவுக்கு ஆஃபர்களை அள்ளிக் கொடுக்கும் டிரம்ப்

கனடாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் டிரம்ப் அந்நாட்டு மக்களுக்கு பல ஆஃபர்களை வழங்கியுள்ளார். அமெரிக்காவின் 51-வது மாகாணமாக கனடா மாறினால், மக்களின் வரிச் சுமை வெகுவாக குறையும் என டிரம்ப் தெரிவித்துள்ளார். உங்கள் வரிகளை பாதியாக குறைக்க போகும் நபரை தேர்ந்தெடுங்கள் என தெரிவித்துள்ள அவர் US-யுடன் இணைந்தால் மக்களுக்கு பல இலவசங்கள் கிடைக்கும் எனவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.