News April 29, 2025
பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் மாவோயிஸ்டுகள்

பேச்சுவார்த்தைக்கு தங்களை அழைக்கும்படி மத்திய அரசை வலியுறுத்தி மாவோயிஸ்டுகள் மீண்டும் கடிதம் எழுதியுள்ளனர். மாவோயிஸ்டுகளை வேட்டையாடும் ‘ககர்’ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தியுள்ளதுடன், பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழலை உருவாக்கும்படியும் மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளது. இது பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாவோயிஸ்டுகள் வெளியிட்டுள்ள 2-வது கடிதமாகும்.
Similar News
News December 9, 2025
₹35,400 சம்பளம்.. நாளையே கடைசி: APPLY

இந்திய ரயில்வேயில் காலியாகவுள்ள ஜூனியர் இன்ஜினியர் உள்ளிட்ட 2,569 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ, டிகிரி. வயது வரம்பு: 18 – 33. சம்பளம்: ₹35,400 முதல் Level 6 அடிப்படையில் வழங்கப்படும். தேர்வு முறை: Tire 1 & 2, சான்றிதழ் சரிபார்ப்பு. விண்ணப்பிக்க கடைசி நாள்: டிச.10. மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே <
News December 9, 2025
அமெரிக்காவில் இந்திய அரிசிக்கு புதிய வரியா?

இந்திய பொருள்களுக்கு USA-வில் ஏற்கெனவே 50% வரி விதிக்கப்பட்ட நிலையில், இந்திய அரிசிக்கு புதிய வரி விதிக்க பரிசீலிப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்திய அரசு மானியங்கள் வழங்கி, USA சந்தையில் அரிசியை குறைந்த விலைக்கு விற்பதால், நஷ்டம் ஏற்படுவதாக USA விவசாயிகள் டிரம்ப்பிடம் புகார் தெரிவித்துள்ளனர். இதனை ‘ஏமாற்று வேலை’ என்று விமர்சித்த டிரம்ப், புதிய வரி விதிக்க திட்டமிட்டுள்ளார்.
News December 9, 2025
இன்னும் சற்றுநேரத்தில் தவெகவில் இணைகிறார்கள்

புதுச்சேரியில் விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்னும் சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. இந்நிலையில், புதுச்சேரி செல்லும் விஜய்க்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க கட்சியினர் முடிவெடுத்துள்ளனர். குறிப்பாக, சமீபத்தில் தவெகவில் இணைந்த சாமிநாதன் (புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர்), கே.ஏ.யு.அசனா (அதிமுக முன்னாள் MLA) ஆகியோர், தங்களின் ஆதரவாளர்களை விஜய் முன்னிலையில் தவெகவில் இணைக்கவிருப்பதாக கூறப்படுகிறது.


