News April 28, 2025
சென்னையில் பாகிஸ்தானியர் காலமானார்

சென்னையில் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பாகிஸ்தானியர் காலமானார். பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்கள் உடனே வெளியேற வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டிருந்தன. இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த பாகிஸ்தானியர் உயிரிழந்தார். இறந்த நபரின் உடலையும், அவரின் தாயையும் பாகிஸ்தானுக்கு அனுப்ப அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Similar News
News October 16, 2025
இதுதான் வடகிழக்கு பருவமழை..!

நிலம் கடலுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடு காரணமாக பருவமழை ஏற்படுகிறது. நிலப்பரப்பில் உருவாகும் உயர் அழுத்தத்தால் காற்று வடகிழக்கு திசையில் வீசுகிறது. இது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து, தமிழகம் மற்றும் இந்திய கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழையை தருகிறது. இதுவே வடகிழக்கு பருவமழை. இது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிகழ்கிறது. இதை, ‘பின்னடையும் பருவமழை’ என்றும் அழைக்கின்றனர்.
News October 16, 2025
சற்றுமுன்: பங்குச் சந்தைகள் பெரும் லாபத்துடன் நிறைவு

இந்திய பங்குச் சந்தைகள் இன்று நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. சென்செக்ஸ் 862 புள்ளிகள் உயர்ந்து 83,467 புள்ளிகளிலும், நிஃப்டி 261 புள்ளிகள் உயர்ந்து 25,585 புள்ளிகளிலும் நிறைவடைந்தன. நெஸ்லே, கோடக் மஹிந்திரா, டைட்டன், ஆக்சிஸ் வங்கி ஆகியவை அதிக லாபம் ஈட்டின. HDFC லைஃப், எடர்னல், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், SBI லைஃப் இன்சூரன்ஸ், ஆகியவை அதிக நஷ்டத்தைச் சந்தித்தன.
News October 16, 2025
BREAKING: பண்டிகை விடுமுறை.. நாளை முதல் தொடங்குகிறது

தீபாவளியையொட்டி மேலும் 5 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. தாம்பரம் – செங்கோட்டை, எழும்பூர் – மதுரை, மதுரை – தாம்பரம் இடையே நாளை முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதற்கான முன்பதிவு இன்று மாலை 4 மணிக்கு தொடங்கியுள்ளது. IRCTC செயலி, இணையதளத்தில் சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். SHARE IT.