News April 5, 2024

தோவாளை: காரில் கொண்டு வந்த ரூ.14 லட்சம் பறிமுதல்

image

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று(ஏப்.4) தோவாளை அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தோவாளையை சேர்ந்த அஜய்காந்த் என்பவரின் காரை சோதனை செய்ததில் ரூ.14 லட்சம் இருந்தது தெரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Similar News

News August 19, 2025

காணாமல் போன தொழிலாளி மலையில் எலும்புக்கூடாக மீட்பு

image

தோப்பூரை சேர்ந்தவர் தொழிலாளி ராஜலிங்கம் (38). இவர் 2 மாதத்திற்கு முன்பு மனைவியுடன் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் அவரை காணவில்லை. இது தொடர்பாக, ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், கடந்த 17ம் தேதி ஆரல்வாய்மொழி மலை உச்சியில் எலும்பு கூடாக கிடந்துள்ளனர். ராஜலிங்கத்தின் இறப்பிற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News August 19, 2025

குமரி இளைஞர்களே, இந்த தேதியை NOTE பண்ணிக்கோங்க

image

கன்னியாகுமரி இளைஞர்களே, நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் ஆக. 22ம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 13 நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன. 250க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. <>இங்கே கிளிக்<<>> செய்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். தொடர்புக்கு – 7904715820, 8270865957. வேலை தேடும் இளைஞர்களுக்காக உடனே SHARE பண்ணுங்க.

News August 19, 2025

குமரி: காவல்துறை இரவு ரோந்து அதிகாரிகள் பட்டியல்

image

கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை இன்று (18.08.2025) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. கோட்டார், நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் SSI மற்றும் HC நிலை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர காலங்களில் 04652-220417 மற்றும் அலுவலர்களின் மொபைல் எண்களை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

error: Content is protected !!