News April 5, 2024
தோவாளை: காரில் கொண்டு வந்த ரூ.14 லட்சம் பறிமுதல்

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தொடர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி நேற்று(ஏப்.4) தோவாளை அருகே பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது, தோவாளையை சேர்ந்த அஜய்காந்த் என்பவரின் காரை சோதனை செய்ததில் ரூ.14 லட்சம் இருந்தது தெரிந்து, உரிய ஆவணங்கள் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Similar News
News November 4, 2025
குமரி: ரூ.35,400 ஊதியத்தில் ரயில்வே வேலை

இந்திய ரயில்வே துறையில் சூப்பர்வைசர், ஸ்டேஷன் மாஸ்டர், கிளார்க் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 5,810 காலியிடங்கள் (தமிழ்நாடு -213) அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்த 18 வயது நிரம்பியவர்கள் www.rrbchennai.gov.in என்ற தளத்தில் நவ.20 க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக ரூ.25,500 – ரூ.35,400 வரை வழங்கப்படும். இத்தகவலை டிகிரி முடித்தவர்களுக்கு உடனே SHARE பண்ணுங்க.
News November 4, 2025
ஆரல்வாய்மொழி: கனிம வளம் கடத்திய லாரி பறிமுதல்

ஆரல்வாய்மொழி போலீசார் ஆரல்வாய்மொழி 4 வழிச்சாலையில் நேற்று (நவ.3) சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஜல்லிக்கற்களை ஏற்றி வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் எந்தவித ஆவணங்களும் இன்றி கனிமவளத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ஜல்லியுடன் லாரியை பறிமுதல் செய்த போலீசார் திற்பரப்பஒ சேர்ந்த டிரைவர் சந்திரன்(54) என்பவரை கைது செய்து லாரி உரிமையாளர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
News November 4, 2025
குமரியில் இலவச கண்புரை சிகிச்சை நடைபெறும் இடங்கள்

கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் இலவச கண்புரை சிகிச்சை முகாம் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சிகிச்சையின் மூலம் தெளிவான நீடித்த பார்வை கிடைப்பது மற்றும் நோயாளிகள் விரைவில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப முடியும். இந்த முகமானது நாளை அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் வைத்து நடைபெற உள்ளது. மேலும் முகாம் பல்வேறு இடங்களில் நடைபெறும் தேதிகள் குறித்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.


