News April 28, 2025
இரட்டை இலை சின்னம் முடக்கம்?

இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று OPS தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வழக்கில் EPS & OPS நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்த நிலையில், டெல்லியில் விசாரணை நடைபெறுகிறது. இதில், அதிமுக சார்பாக C.V.சண்முகம் ஆஜராகியிருக்கிறார். மனுதாரர்கள் தரப்பில் O.P.ரவீந்திரநாத், K.C.பழனிசாமி ஆஜராகியிருக்கின்றனர்.
Similar News
News August 26, 2025
சிரஞ்சீவி அரசியலில் வீழ்ந்த கதை!

சிரஞ்சீவி நிலைதான் <<17519703>>விஜய்க்கும் <<>>என எதிர்க்கட்சியினர் ஆருடம் சொல்கின்றனர். சிரஞ்சீவிக்கு என்ன ஆனது? *1992 முதல் திட்டமிட்டு 2008-ல் சிரஞ்சீவி ’பிரஜா ராஜ்யம்’ கட்சியை தொடங்கினார் * 2009 தேர்தலில் சிரஞ்சீவி (திருப்பதி) உள்பட 18 பேர் மட்டுமே வென்றனர் * YSR மறைவுக்கு பிறகு 2011-ல் கட்சியை காங்கிரஸுடன் இணைத்து மத்திய இணையமைச்சர் ஆனார் * 2014 ஆந்திர பிரிவினைக்கு பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கினார்.
News August 26, 2025
விநாயகர் சதுர்த்தி.. இந்த நேரத்தில் வழிபாடு செய்யுங்க

இன்று மாலை 4.50 – 5.50 வரை அல்லது மாலை 6.30 – இரவு 8.30 வரையிலான நேரத்தில் விநாயகர் சிலையை வாங்கி வந்து வீட்டில் வைக்கலாம். இன்று விநாயகர் சிலையை வாங்கியவர்கள், நாளை காலை 6.00 – 7.20 வரையிலான நேரத்தில் வழிபடலாம். நாளை விநாயகர் சிலை வாங்கினால், மதியம் 1.35 – 2.00 மணி வரை அல்லது மாலை 6.10 மணிக்கு மேல், சுண்டல், கொழுக்கட்டை, சாதம், பாயசம், வடை என இலை போட்டு படையலிட்டு வழிபாடு செய்யலாம்.
News August 26, 2025
Sinquefield Chess: 5-வது முறையாக டிரா செய்த பிரக்ஞானந்தா!

கிராண்ட் செஸ் சுற்றுப்பயணத்தின் அங்கமான சின்கியுபீல்ட் கோப்பை செஸ் போட்டி USA-வில் நடந்து வருகிறது. இதன் 6-வது சுற்றில் போலந்தின் டுடா ஜன் கிர்சிஸ்டோப்வை சந்தித்த பிரக்ஞானந்தா, 32-வது நகர்த்தலில் டிரா செய்தார். இத்தொடரின் முதல் சுற்றில் மட்டுமே வெற்றி பெற்ற பிரக்ஞானந்தா, அதன் பிறகு தொடர்ச்சியாக சந்தித்த 5-வது டிரா இதுவாகும். 9 சுற்றுகள் கொண்ட தொடரில் 4.5 புள்ளிகளுடன் அவர் 2-வது இடத்தில் உள்ளார்.