News April 28, 2025

பொதுமக்களிடம் இருந்து 710 புகார் மனுக்கள் பெறப்பட்டன

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்டா, கல்வி கடன், முதியோர் உதவித்தொகை, குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு புகார்கள் அடங்கிய 710 புகார் மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Similar News

News April 29, 2025

அரசு பேருந்து மோதி இளைஞர் உயிரிழப்பு

image

கும்பகோணம் முத்துப்பிள்ளை மண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது கும்பகோணத்திலிருந்து அய்யாவாடி நோக்கி சென்ற அரசு பேருந்து மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இறந்த நபர் யார் – எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து நாச்சியார் கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 28, 2025

தஞ்சாவூர்: பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை

image

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..

News April 28, 2025

ஜவாஹிருல்லா வழக்கில் இடைக்கால தடை

image

சட்டவிரோதமாக வெளிநாடுகளில் இருந்து ரூ.1.50 கோடி நிதி பெற்றதாக பாபநாசம் எம்.எல்.ஏ ஜவாஹிருல்லாவுக்கு கடந்த 2011ஆம் ஆண்டு குற்றவியல் நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்தது. அதை எதிர்த்து ஜவாஹிருல்லா ஐகோர்ட்டில் முறையிட அங்கும் தண்டனை உறுதிசெய்யப்பட அதைத்தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஓர் ஆண்டு சிறை தண்டனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

error: Content is protected !!