News April 28, 2025
பஹல்காம் தாக்குதல் செய்தி.. சர்ச்சையில் சிக்கிய பிபிசி

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக பிபிசி வெளியிட்ட செய்திகள் சர்ச்சையானது. “காஷ்மீர் சுற்றுலாப் பயணிகள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, இந்தியர்களுக்கான விசாக்களை PAK நிறுத்தி வைத்துள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இது இந்தியா மீது தவறு என்பது போல் உள்ளதாக பலர் விமர்சித்தனர். இதேபோல் தீவிரவாதிகள் என்பதற்கு பதில் போராளிகள் என்று குறிப்பிட்டதை கண்டித்தும் மத்திய அரசு பிபிசி-க்கு கடிதம் எழுதியுள்ளது.
Similar News
News April 28, 2025
அண்ணாமலை ராஜ்யசபா MP இல்லை

தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் அண்ணாமலை, ஆந்திராவில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாவார் என்று செய்திகள் வெளியானது. முன்னதாக, அமித் ஷா – சந்திரபாபு சந்திப்பு நடைபெற்றபோது கூட, இதற்காகத்தான் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என்று பேசப்பட்டது. ஆனால், ராஜ்யசபா வேட்பாளராக, ஆந்திராவின் வெங்கட சத்யநாராயணாவை பாஜக அறிவித்துள்ளது. ஆகையால், அண்ணாமலை தற்போதைக்கு MP ஆகப்போவதில்லை.
News April 28, 2025
தோனியின் வரலாற்றில் முதல் முறையாக…

நடப்பு ஐபிஎல் தொடரில் CSK கடைசி இடத்தில் இருப்பதால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவது மிகவும் சிரமம். அப்படி தகுதி பெறாவிட்டால், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக தோனி இல்லாமல் நடைபெறும் IPL final இதுவாகத்தான் இருக்கும். 2008-ம் ஆண்டு IPL தொடங்கியது முதல், இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது அவர் இறுதிப்போட்டியில் விளையாடியிருக்கிறார். கடந்த ஆண்டும் CSK ஃபைனலுக்கு தகுதி பெறவில்லை.
News April 28, 2025
உயரும் ரபேல் போர் விமானங்களின் எண்ணிக்கை

பிரான்ஸிடமிருந்து ₹64,000 கோடி மதிப்பீட்டில் மேலும் 26 ரபேல் போர் விமானங்களை வாங்கும் ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். கடந்த 9-ம் தேதி இதற்கான அனுமதியை அமைச்சரவை வழங்கி இருந்தது. ஏற்கெனவே இந்தியாவிடம் 36 ரபேல் போர் விமானங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.