News April 28, 2025
கோவையில் மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி

கோவை மாவட்டத்தில் வரும் மே.9, 10ஆம் தேதி மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டி நடைபெறவுள்ளது. இதில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது. இவ்விழாவில் தமிழ் மொழி மற்றும் கலை தொடர்பான போட்டிகள் நடத்தப்படும். விருப்பமுள்ளவர்கள் https://tamilvalarchithurai.in.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் அல்லது 89034-12685 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News July 6, 2025
B.E முடித்தவர்களுக்கு ரூ.1.2 லட்சம் சம்பளத்தில் வேலை

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 1340 Junior Engineer பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு டிப்ளமோ, B.E / B.Tech முடித்தவர்கள் <
News July 6, 2025
குழந்தை வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு

கோவையில் கார்ட்டூன் தொடர்களுக்கு அடிமையாகி, அதில் வரும் கேரக்டர்கள் போல் தங்களை மாற்றி நடந்து கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவர்கள் கவுன்சிலிங் கொடுத்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், 2வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் கார்டூன் பார்ப்பதை அனுமதிக்க கூடாது. பாடம் சார்ந்ததை மட்டும் சிறிது நேரம் பார்க்க அனுமதிக்கலாம். இவ்விஷயத்தில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றனர். (SHARE)
News July 6, 2025
கவியருவி இன்று முதல் திறப்பு

ஆனைமலை அருகே கவியருவி, சில மாதங்களுக்கு முன்பு மூடப்பட்டு, சுற்றுலா பயணிகள் அங்கு செல்லவும், தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனிடையில் கடந்த ஒரு மாதமாக கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து காணப்பட்டதால், தொடர்ந்து கவி அருவி மூடப்பட்டிருந்தது. தற்பொழுது கவியருவிக்கு நீர்வரத்து குறைந்ததால், இன்று முதல் கவியருவி திறக்கப்பட்டு, சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.