News April 28, 2025
திருவாரூரில் வருகிற 1ம் தேதி கிராம சபை கூட்டம்

திருவாரூர் மாவட்டத்திலுள்ள 430 கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2025 அன்று கிராம சபை கூட்டங்கள் நடைபெறவுள்ளன. இக்கூட்டத்தில், தொழிலாளர் தினத்தின் கருப்பொருள், கிராம ஊராட்சி நிர்வாகம், பொதுநிதி செலவினம், இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டட அனுமதி வழங்குதல்,ஆகிய இனங்களை இணையவழி செலுத்துவதை உறுதிப்படுத்த பொதுமக்கள் கலந்து கொள்ள ஆட்சியர் மோகனசந்தரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News April 28, 2025
ரோட்டரி நடத்தும் இலவச கண் சிகிச்சை முகாம்

மன்னார்குடி ரோட்டரி சங்கம் மற்றும் கோவை தனியார் கண் மருத்துவமனை சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் (04/05/2025) ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 1 மணிவரை வடசேரி சாலையில் உள்ள ரோட்டரி ஹாலில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள ரோட்டரி சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதில் கண்கள் தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கு சிகிச்சை குறித்து இந்த முகாம் நடைபெறவிருக்கிறது.
News April 28, 2025
பட்டா, சிட்டாவுக்கு இனி சிரமம் இல்லை.

உங்கள் நிலத்தின் சர்வே எண், பட்டா விவரங்களை அறிய தமிழக அரசால் புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. செல்போனில் TamilNilam Geo-Info என்ற செயலியை பதிவிறக்கம் செய்தால் போதும். அதில் நாம் தற்போது எந்த இடத்தில் இருக்கின்றோமோ அந்த கூகுள் மேப்புடன், சர்வே எண் ஆகிய விவரங்கள் தெரியும். இதில் வீடு, மனை உள்ளிட்ட ஆவணங்களை மக்கள் எளிதாக சரிபார்த்து கொள்ளலாம். அனைவருக்கும் Share செய்து பயனடையுங்கள்..
News April 28, 2025
திருவாரூர்: மின்தடை புகார்களுக்கான எண்

திருவாரூர் மாவட்டத்தில் மின்தடை புகார்களுக்கு கட்டணமில்லா தொலைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. அதன்படி, திருவாரூர் மாவட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலக முகவரி: 73, C – துர்கலையா ரோடு , திருவாரூர் -610001; மின்னஞ்சல் : setrvr@tnebnet.org மற்றும் தொலைப்பேசி எண்: 04366244099. இந்த தகவலை உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்து தெரியப்படுத்துங்க…