News April 28, 2025

மயிலாடுதுறையில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை

image

மயிலாடுதுறையில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் காலியாக உள்ள CUSTOMER SUPPORT EXECUTIVE பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் திறன் பயிற்சி துறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு ரூ.15,000 ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் நபர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்…

Similar News

News August 13, 2025

மதுபான கடைகளை மூட உத்தரவு

image

தமிழக அரசு உத்தரவுபடி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மதுபானக்கூடங்கள் அனைத்தும் ஆகஸ்ட்15 சுதந்திர தினத்தன்று முழுவதுமாக மூட வேண்டும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. இதனை மீறினால் தொடர்புடைய மதுபான கடைகளின் மேற்பார்வையாளர்கள், தனியார் உரிமதாரர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆட்சியர் ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

News August 13, 2025

மயிலாடுதுறை: ரயிலில் பாய்ந்து தற்கொலை!

image

சீர்காழி ஈசானிய தெருவை சேர்ந்தவர் அசோக் இளவரசன் (33). என்ஜினீயரான இவர் குடிநீர் நிறுவனம் நடத்தி வந்தார். மேலும் இவர் பங்கு சந்தையில் முதலீடு செய்து வந்துள்ளார். இதில் நஷ்டம் ஏற்பட்டதில் கடன் பிரச்சினை ஏற்பட்டது. இதன் காரணமாக அவர் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் திடீரென உப்பனாறு ரெயில்வே பாலம் அருகே வந்த ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பு குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

News August 13, 2025

தொடர் மதுவிலக்கு குற்றங்கள் ஈடுபட்டவர் மீது குண்டர் சட்டம்

image

சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் சீர்காழி போலீசார் கடந்த ஜூலை 22 ஆம் தேதி சோதனை மேற்கொண்டதில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த அம்பேத்கர் நகரை சேர்ந்த ராஜ்குமார் என்பவரை கைது செய்தனர். இவர் தொடர் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வருவதால் எஸ் பி அறிவுறுத்தலின்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் தடுப்பு காவல் சட்டத்தில் ராஜ்குமாரை கைது செய்து இன்று கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

error: Content is protected !!